×

விஜய்சேதுபதி நீங்கள் வளர்ந்து வருகிறீர்கள், வளர்பிறையில் கறை எதற்கு ?- வைரமுத்து

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தனது கிரிகெட் வராலாற்றில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியவர். அந்த சாதனை இன்றும் முறியடிக்கப்படாமல் இருக்கிறது. அவரது வாழ்க்கை வரலாறு ‘800’ எனும் பெயரில் தமிழில் திரைப்படமாக எடுக்கப்படுகிறது. அதில் முரளிதரனாக நடிக்கவிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. முரளிதரன் இலங்கை அரசுக்கு ஆதரவாளர் என்பதால் இந்தப் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டாம் என்று பலரும் அமைப்புகளும் விஜய் சேதுபதிக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது
 

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தனது கிரிகெட் வராலாற்றில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியவர். அந்த சாதனை இன்றும் முறியடிக்கப்படாமல் இருக்கிறது. அவரது வாழ்க்கை வரலாறு ‘800’ எனும் பெயரில் தமிழில் திரைப்படமாக எடுக்கப்படுகிறது. அதில் முரளிதரனாக நடிக்கவிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. முரளிதரன் இலங்கை அரசுக்கு ஆதரவாளர் என்பதால் இந்தப் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டாம் என்று பலரும் அமைப்புகளும் விஜய் சேதுபதிக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், “கலையாளர் விஜய் சேதுபதிக்கு… சில நேரங்களில் செய்து எய்தும் புகழைவிடச் செய்யாமல் எய்தும் புகழே பெரிதினும் பெரிது செய்யும். நீங்கள் வளர்ந்து வருகிறீர்கள். வளர்பிறையில் கறை எதற்கு? இன உரிமைக்காகக் கலை உரிமையை விட்டுக் கொடுப்பதே விவேகம்; நீங்கள் விவேகி” என பதிவிட்டுள்ளார்.