×

விஜய் சேதுபதி படத்தில் இருந்து திடீரென்று விலகிய அமலா பால்! ஏன் தெரியுமா? 

விஜய் சேதுபதி படத்தில் இருந்து திடீரென்று அமலா பால் விளக்கியுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை: விஜய் சேதுபதி படத்தில் இருந்து திடீரென்று அமலா பால் விளக்கியுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சிந்துபாத் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அதையடுத்து தற்போது வெங்கடகிருஷ்ண யோக்நாத் இயக்கத்தில் 33வது படத்தில் நடித்துவருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. மேலும் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த வாரம் பழனியில் நடைபெற்று முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காகப் படக்குழுவினர்
 

விஜய் சேதுபதி படத்தில் இருந்து திடீரென்று  அமலா பால் விளக்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

சென்னை: விஜய் சேதுபதி படத்தில் இருந்து திடீரென்று அமலா பால் விளக்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

நடிகர் விஜய் சேதுபதி  நடிப்பில் உருவாகியுள்ள சிந்துபாத் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அதையடுத்து தற்போது வெங்கடகிருஷ்ண யோக்நாத் இயக்கத்தில் 33வது படத்தில் நடித்துவருகிறார். இதில்  அவருக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. மேலும் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த வாரம் பழனியில் நடைபெற்று முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காகப் படக்குழுவினர் ஊட்டி செல்லவுள்ளனர்.

இதற்கிடையில் தற்போது திடீரென்று அமலா பால்  படத்திலிருந்து விளக்கியுள்ளார். இது குறித்து நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்த வேலையில், அவருக்கு இந்த படத்திற்காக கால்ஷீட் தேதி ஒதுக்க முடியாத சூழ்நிலையால்,படத்திலிருந்து விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது. 

எனவே அமலாபாலுக்குப் பதில் இதில் மேகா ஆகாஷ் இணைவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது . இவர் சமீபத்தில் வெளியான சிம்புவின் ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’ படத்தில் நாயகியாக நடித்துத்திருந்தது குறிப்பிடத்தக்கது.