×

வலுக்கும் தந்தை – மகள் மோதல்: என் குடும்ப பிரச்னையில் தலையிட கூடாது: வனிதா விஜயகுமார் பகீர் குற்றச்சாட்டு!

குடும்ப பிரச்னையில் காவல்துறை தலையிட்டு தன்னை மிரட்டுவதாக நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை: குடும்ப பிரச்னையில் காவல்துறை தலையிட்டு தன்னை மிரட்டுவதாக நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல்துறை ஆணையர் அலுலவகத்திற்கு வந்த நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா, தனது குடும்ப பிரச்னையில் காவல்துறையினர் தலையிடுவதாகக் காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை வனிதா விஜயகுமார்,’சென்னை மாதவரத்தில் எனது தாயார் பெயரில் உள்ள வீட்டில்
 

குடும்ப பிரச்னையில் காவல்துறை தலையிட்டு தன்னை மிரட்டுவதாக நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை: குடும்ப பிரச்னையில் காவல்துறை தலையிட்டு தன்னை மிரட்டுவதாக நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல்துறை ஆணையர் அலுலவகத்திற்கு வந்த நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா, தனது குடும்ப பிரச்னையில் காவல்துறையினர் தலையிடுவதாகக் காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை வனிதா விஜயகுமார்,’சென்னை மாதவரத்தில் எனது தாயார் பெயரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறேன். இந்த வீட்டின் சொத்தை அபகரிக்க எனது தந்தை விஜயகுமார் முயற்சித்து வருகிறார். என் தந்தை விஜயகுமாரால் என் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பாதுகாப்பு வழங்க ஆணைப் பெற்றுள்ளேன். 

ஆனாலும் எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறையினர் என்னைக்  காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். குடும்ப பிரச்னை நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் காவல்துறையினர் இந்த விஷயத்தில் தலையிடக் கூடாது. இதனால்  சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே விஸ்வநாதனை சந்தித்து எனது புகார் மனுவை அளித்துள்ளேன். காவல்துறையினர் இந்த விவகாரத்தில் தலையிட மாட்டார்கள் எனக் காவல் ஆணையர் என்னிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்’ என்று வனிதா கூறியுள்ளார்.