×

வனிதாவை கைது செய்ய பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போலீஸ்?

வனிதாவை கைது செய்ய பிக்பாஸ் வீட்டுக்குள் போலீஸ் நுழைந்ததாக வெளிவந்துள்ள செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை: வனிதாவை கைது செய்ய பிக்பாஸ் வீட்டுக்குள் போலீஸ் நுழைந்ததாக வெளிவந்துள்ள செய்தி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமார், சந்திரலேகா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இவருக்கும் ஆனந்தராஜ் என்ற டிவி நடிகருக்கும் கடந்த 2007 ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு விஜய் ஸ்ரீகரி என்ற மகன் மற்றும் ஜோவிகா என்ற மகள் உள்ளார்கள். அதன் பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக இருவரும்
 

வனிதாவை கைது செய்ய பிக்பாஸ் வீட்டுக்குள் போலீஸ் நுழைந்ததாக வெளிவந்துள்ள செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சென்னை: வனிதாவை கைது செய்ய பிக்பாஸ் வீட்டுக்குள் போலீஸ் நுழைந்ததாக வெளிவந்துள்ள செய்தி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமார், சந்திரலேகா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இவருக்கும் ஆனந்தராஜ் என்ற டிவி நடிகருக்கும் கடந்த 2007 ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு விஜய் ஸ்ரீகரி என்ற மகன் மற்றும் ஜோவிகா என்ற மகள் உள்ளார்கள். அதன் பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்தனர். மகள் ஜோவிதா தனது தந்தை ஆனந்தராஜூடன் தெலுங்கானாவில் வசித்து வந்துள்ளார். 

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மகள் ஜோவிதாவை, வனிதா சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். இதனையடுத்து வனிதாவால் தனது மகள் கடத்தப்பட்டதாக ஆனந்தராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் தெலுங்கானா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொண்டிருப்பதை அறிந்த தெலுங்கானா போலீசார் வனிதாவைக் கைது செய்ய தமிழக போலீசாரிடம் உதவி கேட்டுள்ளனர். தற்போது அவர்கள் உதவியுடன் தெலுங்கானா போலீசார் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். 

அங்கு அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணைக்கு பிறகே வனிதா கைது செய்யப்படுவாரா என்பது தெரியவரும். பிக்பாஸ் வீட்டிற்குள் போலீஸ் நுழைந்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் 2017ஆம் ஆண்டு கொடுத்த புகாருக்கு 2019ஆம் ஆண்டு விசாரணை செய்ய போலீஸ் வந்திருப்பது சில சந்தேகங்களையும் எழுப்பி உள்ளது. ஒரு வேல இதுவும் பிக்பாஸ் குழுவினர்களின் ஸ்கிர்ப்ட்களில் ஒன்றாக இருக்கலாம் என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.