×

ரஜினியின் ‘2.0’ படத்துக்காக லீவு விட்ட தனியார் நிறுவனம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படத்தின் முதல் நாள் முதல் காட்சியை காண ஊழியர்களுக்கு தனியர் நிறுவனம் லீவ் அறிவித்துள்ளது. கோயம்புத்தூர்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படத்தின் முதல் நாள் முதல் காட்சியை காண ஊழியர்களுக்கு தனியர் நிறுவனம் லீவ் அறிவித்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவான ‘2.0’ திரைப்படம் இன்று (நவ.29) உலகம் முழுவதும் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு இடையே ரிலீசானது. ’2.0’ ரிலீசை முன்னிட்டு, கோயம்புத்தூரின் சித்தாப்புதூர் பகுதியில் உள்ள
 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படத்தின் முதல் நாள் முதல் காட்சியை காண ஊழியர்களுக்கு தனியர் நிறுவனம் லீவ் அறிவித்துள்ளது.

கோயம்புத்தூர்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படத்தின் முதல் நாள் முதல் காட்சியை காண ஊழியர்களுக்கு தனியர் நிறுவனம் லீவ் அறிவித்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவான ‘2.0’ திரைப்படம் இன்று (நவ.29) உலகம் முழுவதும் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு இடையே ரிலீசானது. ’2.0’ ரிலீசை முன்னிட்டு, கோயம்புத்தூரின் சித்தாப்புதூர் பகுதியில் உள்ள ’கெட் செட் கோ’ என்ற டிரெய்னிங் கம்பெனி, ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய ஒரு நாள் விடுமுறை வழங்கியுள்ளது.

மேலும், முதல் நாள் படத்தை கண்டு ரசிக்க இலவச டிக்கெட்களும் வழங்கி அசத்தியுள்ளது. அந்நிறுவனம் பகிர்ந்துள்ள லீவு அறிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதிநவீன 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஆசியாவிலேயே முதன்முறையக 4டி சவுண்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிக பொருட்செலவில் உருவான இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர்.