×

ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறாரா மஞ்சு வாரியார்? மனம் திறந்த அசுரன் பட நடிகை!

இப்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடிக்கப்போகிறார் என செய்திகள் வலம் வருகிறது. இது தொடர்பாக எந்த அதிகாரபூர்வ தகவல்களும் இல்லை என்றாலும், இதனைப் பற்றி மஞ்சு வாரியர் மனம் திறந்துள்ளார். அசுரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மஞ்சு வாரியார் தன் முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அடுத்து அவர் எப்போது தமிழில் நடிக்க போகிறார் என அனைவரும் எதிர்பாத்திருக்கின்றனர். கேரளாவின் லேடி சூப்பர் ஸ்டாரான மஞ்சு வாரியார் பல
 

இப்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடிக்கப்போகிறார் என செய்திகள் வலம் வருகிறது. இது தொடர்பாக எந்த அதிகாரபூர்வ தகவல்களும் இல்லை என்றாலும், இதனைப் பற்றி மஞ்சு வாரியர் மனம் திறந்துள்ளார்.

அசுரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மஞ்சு வாரியார் தன் முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அடுத்து அவர் எப்போது தமிழில் நடிக்க போகிறார் என அனைவரும் எதிர்பாத்திருக்கின்றனர். கேரளாவின் லேடி சூப்பர் ஸ்டாரான மஞ்சு வாரியார் பல படங்களில் நடித்து வருவதால் பிஸியாக உள்ளார். தற்போது மோகன் லால் நடிக்கும் ‘மரக்கர்: அரபிக்கடலிண்டே சிம்ஹாம்’ என்ற படத்திலும், மம்மூட்டி நடிக்கும் ‘தி ப்ரைஸ்ட்’ படத்திலும் நடித்து வருகிறார்.

இப்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடிக்கப்போகிறார் என செய்திகள் வலம் வருகிறது. இது தொடர்பாக எந்த அதிகாரபூர்வ தகவல்களும் இல்லை என்றாலும், இதனைப் பற்றி மஞ்சு வாரியர் மனம் திறந்துள்ளார்.

‘ரேடியோ  மேங்கோ’ என்ற ரேடியோ சேனலில் பேசிய அவர், “ரஜினிகாந்த் 
படத்தில் நடிக்க இதுவரை யாரும் என்னை அணுகவில்லை. அவரின் படத்தில் நான் நடிக்கப்போகிறேன்  என்று செய்தியை நானும் கேள்விப்பட்டேன். 
இருப்பினும், இதுவரை யாரும் என்னை அதிகாரப்பூர்வமாக தொடர்பு கொள்ளவில்லை. இப்போதுவரை இது ஒரு போலி செய்தி. இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் இதை தீவிரமாக பரிசீலிக்கிறார்களா?” என்று எனக்குத் தெரியவில்லை, “என்றார். 

 

மேலும், த்ரிஷா கிருஷ்ணன் நடித்த 96 படத்தில் நடிக்க வேண்டிய வாய்ப்பை எப்படி இழந்தார் என்பதையும், இந்த படத்தையும் அதே போல் இழக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறினார். அவர் மேலும் கூறுகையில், “உண்மையில், ’96 ‘ படத்தின் தயாரிப்பாளர்கள் கதையை என்னிடம் சொல்ல தங்களால் முடிந்தவரை முயன்றனர். இருப்பினும், அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த விஷயத்தை ஒரு விருது வழங்கும் விழாவின் போது தான் தெரிந்து கொண்டேன்” என்றார்.