ரசிர்களுக்கு சிம்பு வைத்த கோரிக்கை: என்ன தெரியுமா? வீடியோ
பிளாக்கில் டிக்கெட் வாங்கி படம் பார்க்க வேண்டாம் என்றும் கட் அவுட் வைக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு நடிகர் சிலம்பரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: பிளாக்கில் டிக்கெட் வாங்கி படம் பார்க்க வேண்டாம் என்றும் கட் அவுட் வைக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு நடிகர் சிலம்பரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான செக்க சிவந்த வானம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து படுபிஸியாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி வெளிவர உள்ளது.
இந்நிலையில் நடிகர் சிம்பு தன் ரசிகர்களுக்கு வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில்,பிளாக்கில் டிக்கெட் வாங்கி படம் பார்க்க வேண்டாம் என்றும் தனது கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யவேண்டாம். அதற்கு பதிலாக ரசிகர்கள் தங்களுடைய அம்மா அப்பாவிற்கு ஆடையையோ அல்லது தேவையான பொருட்களையோ வாங்கி கொடுங்கள். அதைப் புகைப்படம் எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிடுங்கள்.அதைவிட சந்தோசம் எனக்கு வேறு கிடையாது. நான் நல்ல படங்களில் நடிப்பதன் மூலம் உங்கள் பெயரை காப்பாற்றுவேன். நீங்களும் எனக்காக இதைச் செய்யுங்கள்’ என்று கூறியுள்ளார்.