யோகிபாபு வாழ்க்கைக்கு எண்டுகார்டு போன நினைத்த நடிகை: டிவி மேலாளருடன் கூத்தடித்தது நினைவிருக்கா?
டிவி மேலாளர் சுகுமாரின் மனைவி மற்றும் குழந்தைகள் ஊருக்கு சென்றிருந்த நேரத்தில் அவருடன் அவரது வீட்டில் இரண்டு நாட்கள் தங்கி உல்லாசமாக இருந்தார்.
சின்னதிரை மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் யோகிபாபு பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். குறிப்பாக அஜித், விஜய், சூர்யா ஆகியோருடன் நடித்துள்ள அவர் தனது கடின உழைப்பால் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தர்பாரில் இணைந்துள்ளார். இவர் சமீப காலமாக ஹீரோவாகவும் பல படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான தர்ம பிரபு, கூர்கா உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் யோகி பாபு திருமண கோலத்தில் ஒரு பெண்ணுடன் இருப்பது போல புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதைக்கண்ட நெட்டிசன்கள் யோகிபாபுவுக்கு இவ்வளவு அழகான மனைவியா? எப்போ சார் கல்யாணம் ஆச்சு..சொல்லவே இல்ல என்பது போல கமண்ட்டுகளை தெறிக்கவிட்டு வந்தனர். இதைக்கண்ட அதிர்ச்சியடைந்த யோகி பாபு தனது டிவிட்டர் பக்கத்தில், ‘என் கல்யாணம் பற்றிய தவறான தகவல்கள் பரவி வருகிறது. அது வெறும் வதந்தியே. எனது கல்யாணம் முடிவானதும் நானே அனைவருக்கும் முறையாக அறிவிப்பேன். நன்றி’ என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அதெல்லாம் இருக்கட்டும் யோகிபாபுவுடன் புகைப்படத்திலிருந்த பெண்ணை எங்கேயோ பார்த்த மாதிரி உள்ளதே என்று நினைக்கிறீர்களா? அந்த பெண்னின் பெயர் சபீதா ராய். இவர் வாணி ராணி உள்ளிட்ட சில தொடர்களில் நடித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு சபீதா ராய் சென்னை ஆழ்வார்திருநகரில் வசித்து வந்த ராடான் டிவி மேலாளர் சுகுமாரின் மனைவி மற்றும் குழந்தைகள் ஊருக்கு சென்றிருந்த நேரத்தில் அவருடன் அவரது வீட்டில் இரண்டு நாட்கள் தங்கி உல்லாசமாக இருந்தார்.
இதையடுத்து இந்த கள்ளஜோடிக்கு இடையே சின்ன வாய்த்தகராறு ஏற்பட அது ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறியது. இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுக்க இந்த விவகாரம் வளசரவாக்கம் காவல்நிலையம் மற்றும் ஊடகங்கள் வரை சென்றது. பின்பு இவர்களின் ஆக்ஷன் காட்சிகள் சமூக வலைதளங்களிலும் பரவி சந்தி சிரித்தது.
சபீதா ராய் பொதுவாகவே ஏதாவது ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு செல்வதும் அங்குள்ள நடிகர்களுடன் செல்பி எடுத்து அதை இணையத்தில் வெளியிட்டு வருவதையும் வழக்கமாகக் கொண்டிருப்பாராம்.
அப்படி தான் யோகிபாபுவுடன் தம்படம் எடுத்த இந்த அம்மணி அதை இணையத்தில் வெளியிட்டு அவரது வாழ்க்கைக்கு எண்டுகார்டு போட பார்த்துள்ளார்.