×

மூளை கட்டியால் உயிருக்கு போராடும் பிரபல நடிகை: சிகிச்சைக்கு உதவ கோரிக்கை!

நடிகை சரண்யா சசியின் அறுவை சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளா: நடிகை சரண்யா சசியின் அறுவை சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழில் ‘பச்சை என்கிற காத்து’ படத்தில் நடித்தவர் நடிகை சரண்யா சசி. இவர் மலையாளத்தில் மோகன்லாலுடன் சோட்டா மும்பை, தலப்பாவு, பாம்பே மார்ச் 12, மரியா காலிப்பினலு உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து இவர் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு மூளையில் கட்டி ஏற்பட்டதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை
 

நடிகை சரண்யா சசியின் அறுவை சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கேரளா:  நடிகை சரண்யா சசியின் அறுவை சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தமிழில் ‘பச்சை என்கிற காத்து’ படத்தில் நடித்தவர் நடிகை சரண்யா சசி. இவர் மலையாளத்தில் மோகன்லாலுடன்  சோட்டா மும்பை, தலப்பாவு, பாம்பே மார்ச் 12, மரியா காலிப்பினலு உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து இவர்  கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு மூளையில்  கட்டி ஏற்பட்டதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதன் பின்னர் பினு சேவியர் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட சரண்யா சசி தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள தொடர்களிலும் நடித்து வந்தார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வம் தந்த வீடு தொடரில் முதலில் ஒப்பந்தமான இவர் ஓரிரு எபிசோடுகளுக்கு பிறகு மாற்றப்பட்டார். 

இந்நிலையில்  நடிகை சரண்யா சசிக்கு மீண்டும் மூளையில்  கட்டி ஏற்பட்டுள்ளது. இதை மீண்டும் அறுவை சிகிச்சை மூலம் நீக்க வேண்டும் என்றும் அதற்குச் செலவு அதிகமாகும் என்றும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் நடிகை சரண்யா சசியின் சிகிச்சைக்கு நடிகர் நடிகைகள் உதவவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

இதுபற்றி கேரள சமூக சேவகர் சூரஜ் பாலகரனும், நடிகை சீமா. ஜி நாயரும் இணைந்து முகநூலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், இதுவரை ஆறுமுறை அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ள சரண்யாவின் உடல்நிலை தற்போது மோசமாக உள்ளது. தற்போது சிகிச்சைக்காக அவருக்குப் பணஉதவி தேவைப்படுகிறது. அதனால்  அவருக்கு உதவி செய்யுங்கள்’ என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.