×

மூச்சு விடவே கடினப்பட்டுக் கொண்டிருந்த பரவை முனியம்மாள் : மருத்துவமனையில் சேர்த்த நடிகர்..!

நடிகர் அபி சரவணன் இன்று காலை பரவை முனியம்மாவின் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்தார். பிரபல நாட்டுப்புற பாடகியான பரவை முனியம்மாள் உடல் நலம் சரியில்லாததால் மதுரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். போதிய பணவசதி இல்லாததால், சிகிச்சையைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். தனது சிகிச்சைக்கு உதவும் படி, தமிழக அரசிடம் பரவை முனியம்மா கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் நடிகர் அபி சரவணன் இன்று காலை பரவை முனியம்மாவின் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்தார்.
 

நடிகர் அபி சரவணன் இன்று காலை பரவை முனியம்மாவின் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்தார்.

பிரபல நாட்டுப்புற பாடகியான பரவை முனியம்மாள் உடல் நலம் சரியில்லாததால் மதுரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். போதிய பணவசதி இல்லாததால், சிகிச்சையைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். தனது சிகிச்சைக்கு உதவும் படி, தமிழக அரசிடம் பரவை முனியம்மா கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் நடிகர் அபி சரவணன் இன்று காலை பரவை முனியம்மாவின் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்தார். மேலும், பரவை முனியம்மாவிற்கு பழங்கள், துணிகள் மற்றும் மருந்துப் பொருட்கள் என அனைத்தையும் வாங்கி கொடுத்தார். 

அதனையடுத்து, பரவை முனியம்மா மூச்சு விடுவதற்கே மிகவும் சிரமப் படுகிறார் என்று பரவை முனியம்மாவின் குடும்பத்தினர் அபி சரவணனுக்கு தகவல் அளித்துள்ளனர். அதனைக் கேட்டவுடனே பரவை முனியம்மாவை மதுரையில் உள்ள வேலம்மாள் மருத்துவமனையில், அவசர சிகிச்சைப் பிரிவில் நடிகர் அபி சரவணன் அனுமதித்துள்ளார். 

 
இந்த தகவலை அறிந்தவுடன், நடிகர் சங்கத்திலிருந்து கார்த்தி, நாசர், பொன்வண்ணன், ஐசரி கணேஷ் மற்றும் பாக்யராஜ் ஆகியோர் அபி சரவணனிடம் பரவை  முனியம்மாளின் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளனர். பரவை  முனியம்மாள் அவர்களுக்கு தற்போது தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது.