×

முதல் முறையாக தனது காதலனை உலகிற்கு அறிமுகப்படுத்தினார் சிம்பு பட நடிகை!

நடிகை சனா கான் முதல் முறையாக தனது காதலனை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். சென்னை: நடிகை சனா கான் முதல் முறையாக தனது காதலனை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். தமிழில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘சிலம்பாட்டம்’ படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சனா கான்.அதையடுத்து பல படங்களில் நடித்துத்திருந்தாலும் இவர் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலமானார். இந்நிலையில் இவர் நடன இயக்குநர் மெல்வின் லூயிஸை காதலிப்பதாகத் தகவல்கள் வெளியானது.ஆனால் இதுபற்றி அவர் எதுவும் தெரிவிக்காமல்
 

நடிகை சனா கான் முதல் முறையாக தனது காதலனை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். 

சென்னை: நடிகை சனா கான் முதல் முறையாக தனது காதலனை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். 

தமிழில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘சிலம்பாட்டம்’ படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சனா கான்.அதையடுத்து பல படங்களில் நடித்துத்திருந்தாலும் இவர் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலமானார். 

இந்நிலையில் இவர் நடன இயக்குநர் மெல்வின் லூயிஸை காதலிப்பதாகத் தகவல்கள் வெளியானது.ஆனால்  இதுபற்றி அவர் எதுவும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தார். இந்நிலையில் அவர் காதலிப்பதை ஒப்புக் கொண்டுள்ளார். இருவரும் சமீபத்தில் டி.வி.நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். அப்போதிலிருந்து காதலிக்கத் தொடங்கியுள்ளனர். தற்போது அவருடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். 

அதில் அவர் கூறியதாவது, ‘உன்னைச் சந்திக்கும் வரை இப்படி யாரையும் காதலிப்பேன் என்று எனக்குத் தெரியாது. நான் உன்னிடம் கண்டதை, சிலர் தன் வாழ்நாள் முழுவதும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் உன் காதலால் நான் நெகிழ்கிறேன். 

ஒவ்வொரு நாளும் உன்னிடம் இருந்து நிறைய விஷயங்களைக் கற்கிறேன். நீ என்னைச் சிறந்தவளாக மாற்றியிருக்கிறாய். என் காதலை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. என் வாழ்க்கையில் நீ வந்ததற்காக, நான் அதிர்ஷ்டசாலி என்றே உணர்கிறேன். நான் இதுவரை ஏதாவது உருப்படியாகச் செய்திருக்கிறேன் என்றால் அது என் இதயத்தை உன்னிடம் கொடுத்ததுதான் என்று தனது காதலைத் உருகி உருகித் தெரிவித்துள்ளார்.