×

முதல் முறையாக 2வது பாகத்திற்கு ஓகே  சொன்ன சிம்பு! எந்த படம் தெரியுமா? 

சிம்பு நடிப்பில் வெளியான ‘தொட்டி ஜெயா’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: சிம்பு நடிப்பில் வெளியான ‘தொட்டி ஜெயா’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடிக்கவிருக்கிறார் . இதன் படப்பிடிப்பு, கடந்த பிப்ரவரி மாதமே தொடங்க இருந்த நிலையில் சிம்பு உடல் எடையை குறைக்க கால அவகாசம் கேட்டதால் தள்ளிப்போனது. இந்தப் படத்துக்காக வெளிநாட்டில் இரண்டு
 

சிம்பு நடிப்பில் வெளியான ‘தொட்டி ஜெயா’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: சிம்பு நடிப்பில் வெளியான ‘தொட்டி ஜெயா’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில்  ‘மாநாடு’ படத்தில் நடிக்கவிருக்கிறார் . இதன் படப்பிடிப்பு, கடந்த பிப்ரவரி மாதமே தொடங்க இருந்த நிலையில் சிம்பு உடல் எடையை குறைக்க கால அவகாசம் கேட்டதால் தள்ளிப்போனது. இந்தப் படத்துக்காக வெளிநாட்டில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்து உடல் எடையைக் குறைத்ததோடு, தற்காப்புக் கலைகளையும் கற்றுள்ளார் சிம்பு.சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சிம்பு ஜோடியாகக் கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கிறார்.

இதைத் தொடர்ந்து, கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ‘மஃப்டி’ தமிழ் ரீமேக்கில் நடிகர் சிம்பு நடிக்கவிருக்கிறார். அவருடன் இணைந்து கெளதம் கார்த்திக்கும் இதில் நடிக்கிறார். கன்னடத்தில் இயக்கிய நரதனே இயக்கவிற்கும் இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

இவ்விரு படங்கள் முடிந்த பிறகு துரை இயக்கத்தில் தொட்டி ஜெயா-2 பாகத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார். கேங்க்ஸ்டர் திரில்லர் படமான இதன் இரண்டாம் பாகம், சுமார் படம் வெளியாகி 14 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்துக்கான வேலைகளில் இறங்கியுள்ளார் படத்தின் இயக்குநர் துரை.

2005-ம் ஆண்டு வெளியான ‘தொட்டி ஜெயா’ படத்தில் கதாநாயகியாக கோபிகா நடத்துத்திருந்தார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஒரு பாடலுக்கு மட்டும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.