×

முகநூலில் கொஞ்சி கொள்ளும் ஈஸ்வர் – மகாலட்சுமி : ஆதாரத்தை வெளியிட்ட மனைவி ஜெயஸ்ரீ

வழக்குப் பதிவு செய்த போலீசார், ஈஸ்வரையும் அவரது தாயாரையும் கைது செய்து ஜாமீனில் விடுவித்து உள்ளனர். சின்னதிரை நடிகை ஜெயஸ்ரீ தனக்கு கணவருக்கும் நடிகை மகாலட்சுமிக்கும் கள்ள உறவு இருப்பதாகக் கூறி பரபரப்பை கிளப்பினார். மேலும் விவாகரத்து கேட்டு கணவன் துன்புறுத்துவதாக போலீசில் புகார் கொடுக்க ஈஸ்வர் மற்றும் அவரது தாய் 7பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஈஸ்வரையும் அவரது தாயாரையும் கைது செய்து ஜாமீனில் விடுவித்து உள்ளனர். இந்த குற்றச்சாட்டை
 

வழக்குப் பதிவு செய்த போலீசார், ஈஸ்வரையும் அவரது தாயாரையும் கைது செய்து ஜாமீனில் விடுவித்து உள்ளனர்.  

சின்னதிரை நடிகை ஜெயஸ்ரீ தனக்கு கணவருக்கும் நடிகை மகாலட்சுமிக்கும் கள்ள உறவு இருப்பதாகக் கூறி பரபரப்பை கிளப்பினார். மேலும் விவாகரத்து கேட்டு கணவன் துன்புறுத்துவதாக போலீசில் புகார் கொடுக்க ஈஸ்வர் மற்றும் அவரது தாய்  7பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஈஸ்வரையும் அவரது தாயாரையும் கைது செய்து ஜாமீனில் விடுவித்து உள்ளனர்.  

இந்த குற்றச்சாட்டை ஈஸ்வரும் மகாலட்சுமியும் மறுத்துள்ளனர். குறிப்பாக நடிகர் ஈஸ்வர் எனக்கும் மகாலட்சுமிக்கும் தொடர்பில்லை. என் மனைவிக்கும் மகாலட்சுமியின் கணவருக்கும் தான் தொடர்பு என்று கூறி பரபரப்பை  கிளப்பினார். 

இந்நிலையில் மகாலட்சுமியும் , ஈஸ்வரும் முகநூலில் கொஞ்சி கொள்வது போன்ற சில ஆதாரத்தை ஜெயஸ்ரீ வெளியிட்டு உள்ளார். அதில் மகாலட்சுமியை ஈஸ்வர் பப்பு என்று கூறி அழைத்துள்ளார்.  

 

முன்னதாக இதுகுறித்து பேசியுள்ள மகாலட்சுமி, ‘நானும் ஒரு பொண்ணுதானங்க. என் மானமே போச்சு. ஈஸ்வர் எனக்கு நல்ல நண்பர் மட்டும் தான், அவரை திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் எல்லாம் எனக்கு இல்லை. நான் ஏன்  அவருக்கு வீடியோ கால் பேசப்போறேன். அதுவும் அவங்க மனைவி இருக்கும் போது பேசுவாங்களா? நான் எனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற இருக்கிறேன். எங்க கேஸ் கோர்ட்டுல இருக்கு’ என்று கூறியுள்ளார்.