×

‘மாரி 2’ படத்தில் நடித்த பிரபல நடிகர் தீ விபத்தில் சிக்கி படுகாயம்!

தமிழில் அபியும் நானும், மாரி 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து இயக்குநர் ஸ்வப்னேஷ் கே நாயர் இயக்கும் எடக்காட் பட்டாலியன் என்ற மலையாளப் படத்தில் நடித்துவருகிறார். கோழிக்கோடு: பிரபல நடிகர் டோவினோ தாமஸ் படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மலையாளத்தில் தாரா, யூ டூ புரூட்டஸ், என்னுநின்டே மொய்தீன், சார்லி உட்படப் பல படங்களில் நடித்தவர் நடிகர் டோவினோ தாமஸ். இவர் தமிழில், அபியும் நானும், மாரி 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
 

தமிழில் அபியும் நானும், மாரி 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து இயக்குநர் ஸ்வப்னேஷ் கே நாயர் இயக்கும் எடக்காட் பட்டாலியன் என்ற மலையாளப் படத்தில் நடித்துவருகிறார்.

கோழிக்கோடு: பிரபல நடிகர் டோவினோ தாமஸ் படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மலையாளத்தில் தாரா, யூ டூ புரூட்டஸ், என்னுநின்டே மொய்தீன், சார்லி உட்படப் பல படங்களில் நடித்தவர் நடிகர் டோவினோ தாமஸ். இவர் தமிழில், அபியும் நானும், மாரி 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து இயக்குநர் ஸ்வப்னேஷ் கே நாயர் இயக்கும் எடக்காட் பட்டாலியன் என்ற மலையாளப் படத்தில் நடித்துவருகிறார். இதில்  சம்யுக்தா மேனன், ரேகா, சுதீஷ், அபு சலீம் உட்படப் பலர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இந்தப் படத்தின் சண்டைக் காட்சி படப்பிடிப்பு கோழிக்கோடு பகுதியில் நடந்து வந்தது. படத்தில் கமாண்டோ வீரராக நடிக்கும்  டோவினோ தாமஸ் உடலில் தீப்பற்றிய நிலையில் நடிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அதனால் உடலில் தீ பரவாதவாறு அவருக்கு உடை அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் எதிர்பாராத விதமாக அவரது உடலில் தீப்பற்றிக் கொண்டது. இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் தீயை அணைத்து  பின் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்  சென்றனர். பயப்படும்படியாக எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் தரப்பில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.