×

மாயமான பவர் ஸ்டார்: சென்னை காவல்நிலையத்தில் திடீர் ஆஜர்!

பிரபல நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் திடீரென மாயமானதையடுத்து இன்று அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை : பிரபல நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் திடீரென மாயமானதையடுத்து இன்று அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளிவந்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘ஐ’, ‘கோலி சோடா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன். நேற்று நண்பரை பார்க்கச் சென்ற
 

பிரபல நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் திடீரென மாயமானதையடுத்து இன்று அண்ணாநகர்  காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை : பிரபல நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் திடீரென மாயமானதையடுத்து இன்று அண்ணாநகர்  காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளிவந்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘ஐ’, ‘கோலி சோடா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன். நேற்று நண்பரை பார்க்கச் சென்ற இவர், வீடு திரும்பவில்லை என அவரது மனைவி ஜூலி, அண்ணா நகர் காவல் நிலையத்தில் இன்று காலை புகார் அளித்தார். அதோடு இன்றி, பவர் ஸ்டாரின் சொத்துக்களை தங்களது பெயரில் எழுதி வைக்கக் கூறி மர்ம நபர்கள் சிலர் மிரட்டல் விடுத்ததாகவும் ஜூலி தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

பின்னர் பவர் ஸ்டார் சீனிவாசனை போலீசார் தொடர்பு கொண்டு பேசுகையில், சொத்து விவகாரம் காரணமாக ஊட்டிக்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் நீலகிரி மாவட்டம் உதகையில், பவர் ஸ்டார் சீனிவாசன் பத்திரமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரது மகள்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த சூழ்நிலையில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் இன்று சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் அவர் ஆஜராகியுள்ளார்.