×

மாநாடு படத்தில் சிம்புக்கு வில்லனாக கங்கை அமரனா? 

மாநாடு படத்தில் கங்கை அமரன் நடிக்கவுள்ளதாகப் பரவி வந்த செய்தியை இயக்குநர் வெங்கட் பிரபு மறுத்துள்ளார். சென்னை: மாநாடு படத்தில் கங்கை அமரன் நடிக்கவுள்ளதாகப் பரவி வந்த செய்தியை இயக்குநர் வெங்கட் பிரபு மறுத்துள்ளார். நடிகர் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான வந்தா ராஜாவா தான் வருவேன் படத்துக்குப் பின் அவர் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, இந்த மாதமே தொடங்க இருந்த நிலையில் சில காரணங்களால் ஜூன் மாதத்துக்குத்
 

மாநாடு படத்தில் கங்கை அமரன் நடிக்கவுள்ளதாகப் பரவி வந்த செய்தியை இயக்குநர் வெங்கட் பிரபு மறுத்துள்ளார். 

சென்னை: மாநாடு படத்தில் கங்கை அமரன் நடிக்கவுள்ளதாகப் பரவி வந்த செய்தியை இயக்குநர் வெங்கட் பிரபு மறுத்துள்ளார். 

நடிகர் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான வந்தா ராஜாவா தான் வருவேன் படத்துக்குப் பின் அவர் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, இந்த மாதமே தொடங்க இருந்த நிலையில் சில காரணங்களால் ஜூன் மாதத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் படத்தில் வெங்கட் பிரபுவின் தந்தையும், இசையமைப்பாளருமான கங்கை அமரன், சிம்புவுக்கு  வில்லனாக நடிக்க போவதாக சமூக வலைத்தளங்களில் சில செய்தி பரவி வருகிறது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மிகவும் தூண்டியது. 

தற்போது படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு இந்த செய்தியை முற்றிலும் மறுத்துள்ளார். இதைப் பற்றி அவர் கூறுகையில், ‘மாநாடு படத்தில் என் தந்தை வில்லனாக நடிக்கிறார் என்று பரவும் செய்தி பொய்யானது. வேறு நடிகரிடம் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த மாதிரியான வதந்திகள் பரவுவது வேடிக்கையாக உள்ளது’ என்று கூறியுள்ளார்.