×

மாநாடு திரைப்படத்தின் கதாநாயகி இவரா? உற்சாகத்தில் ரசிகர்கள்!

நடிகர் சிம்பு நடிக்கவிருக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தில் கதாநாயகியாக ராஷிகண்ணா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது சென்னை: நடிகர் சிம்பு நடிக்கவிருக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தில் கதாநாயகியாக ராஷிகண்ணா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தை தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்க்ஸை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ள நடிகர் சிம்பு, சுந்தர்.சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,இதைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அரசியல் சார்ந்த
 

நடிகர் சிம்பு நடிக்கவிருக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தில் கதாநாயகியாக  ராஷிகண்ணா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

சென்னை: நடிகர் சிம்பு நடிக்கவிருக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தில் கதாநாயகியாக  ராஷிகண்ணா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

‘செக்கச்சிவந்த வானம்’ படத்தை தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்க்ஸை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ள நடிகர் சிம்பு, சுந்தர்.சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,இதைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அரசியல் சார்ந்த காமெடி ஆக்ஷன் திரைப்படமாக ‘மாநாடு’ உருவாகவுள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிக்கவிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநாடு திரைப்படத்தின் கதாநாயகி யாராக இருக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் நிலையில், நடிகை ராஷிகண்ணா நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ராஷிகண்ணா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘அடங்கமறு’ திரைப்படம் வெற்றியானதையடுத்து, இந்த படம் அடுத்த ஆண்டு சிம்புவின் பிறந்த நாளான 2020 பிப்ரவரி வெளியாகும் என அவரது ரசிகர்கள் மத்தியில் பேச்சுகள் அடிபடுகிறது.