×

பேனாவில் பொட்டு வைத்து இயக்குநரை கவர்ந்த ஷில்பா மஞ்சுநாத்!

இயக்குநர் விஜயன்.சி இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ ‘. இப்படத்தில் ‘நீ என்ன மாயம் செய்தாய்’ படத்தின் கதாநாயகன் விவேக் நடிக்க அவருக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். இயக்குநர் விஜயன்.சி இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ ‘. இப்படத்தில் ‘நீ என்ன மாயம் செய்தாய்’ படத்தின் கதாநாயகன் விவேக் நடிக்க அவருக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். இவர்களுடன் நடிகை சச்சு, இயக்குனர் சரவண சுப்பையா, நடிகர்கள் லிவிங்ஸ்டன், ஆர்.சுந்தர்ராஜன், டெல்லிகணேஷ், மீசை
 

இயக்குநர்  விஜயன்.சி இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ ‘. இப்படத்தில்  ‘நீ என்ன மாயம் செய்தாய்’ படத்தின் கதாநாயகன் விவேக் நடிக்க அவருக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார்.

இயக்குநர்  விஜயன்.சி இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ ‘. இப்படத்தில்  ‘நீ என்ன மாயம் செய்தாய்’ படத்தின் கதாநாயகன் விவேக் நடிக்க அவருக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார்.  இவர்களுடன் நடிகை சச்சு, இயக்குனர் சரவண சுப்பையா,  நடிகர்கள் லிவிங்ஸ்டன், ஆர்.சுந்தர்ராஜன், டெல்லிகணேஷ், மீசை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர்  நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் அனுபவம் குறித்து நடிகை  ஷில்பா மஞ்சுநாத் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில், ‘காளி, இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் என இரண்டு படங்களிலும் நான் ஒப்பந்தமாவதற்கு முன்பே நான் தமிழில் நாயகியாக அறிமுகமான திரைப்படம்  பேரழகி ஐ.எஸ்.ஓ தான். முதல் படத்திலேயே இரண்டு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சியாகவும் அதே சமயம் சவாலாகவும் இருந்தது. 

முதன்முதலில் பொட்டு இல்லாமல் இருந்த என் முகத்தை பார்த்து ஹோம்லி கதாபாத்திரம் செட் ஆகுமா என்று தயக்கப்பட்டார். உடனே நான் அவருடைய பேனாவை வாங்கி அதில் பொட்டு  வைத்து கொண்டு வந்த உடன் அவரது  சந்தேகம் காணாமல் போனது. ஆனாலும் வலிமையான கதாபாத்திரம் என்பதால் நான் 4, 5 முறை ஆடிஷனில் கலந்து கொண்டேன்’ என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், ‘இந்த படத்தில் சச்சும்மா என் பாட்டியாக நடித்துள்ளார்.அவரின் நடிப்பை நான் நன்றாக உற்று கவனிப்பேன். அது அவருக்கு கூட தெரியாது.  என்னுடைய கேரக்டர் கமல்ஹாசன் மாதிரி அமைதியாக இருக்கும். ஆனால் சச்சும்மாவின் கேரக்டரோ வடிவேலு மாதிரி ஒரே கலாட்டாவாக இருக்கும். உண்மையில் சொல்ல போனால் இயக்குனர் விஜயன் கதையை உருவாக்கி இருந்த விதம், அழகாக எனது கதாபாத்திரங்களை உள்வாங்கி நடிக்க உதவியாக இருந்தது’ என்று தெரிவித்துள்ளார்.

பினிஷிங் டச்சாக அவரின் அடுத்தடுத்த படங்கள் குறித்த கேள்விக்கு, ‘தமிழில் சில படங்களில் நடிக்க வாய்ப்பு தேடிவந்தாலும் எல்லாமே லவர் கேர்ள் கதாபாத்திரங்களாகவே வருகின்றன. அதனால் அதை தவித்து விடுகிறேன். நடிப்பில் புகுந்து விளையாடும் சவாலான கதாபாத்திரங்கள் என்றால் அதை மிஸ் பண்ணக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறேன். அதனால் இப்போதைக்கு ஒரே ஒரு கன்னட படம் மட்டும் தான் கையில் இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.