×

புற்றுநோய் சிகிச்சை பெற்றுவரும் பிரபல பாலிவுட் நடிகருடன் ஒரு சந்திப்பு!

நடிகர் ரிஷிகபூரை பாலிவுட் நட்சத்திரங்கள் அனுபம்கெர், ஜெனிலியா, அர்ஜுன் கபூர் உள்ளிட்ட பலர் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர் மும்பை: நடிகர் ரிஷிகபூரை பாலிவுட் நட்சத்திரங்கள் அனுபம்கெர், ஜெனிலியா, அர்ஜுன் கபூர் உள்ளிட்ட பலர் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர் பாலிவுட்டின் பிரபல நடிகராக எய்ட்டிஸ் காலகட்டங்களில் வலம்வந்தவர் ரிஷிகபூர். இவர் நடிகர் ராஜ் கபூரின் மகனாவார். பாபி என்னும் படத்தின் மூலம் அறிமுகமான ரிஷிகபூர் தன்னுடன் பல படங்களில் நடித்த நீது சிங்கை திருமணம் செய்து கொண்டார். இந்த
 

நடிகர் ரிஷிகபூரை பாலிவுட் நட்சத்திரங்கள்  அனுபம்கெர், ஜெனிலியா, அர்ஜுன் கபூர் உள்ளிட்ட பலர் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர்

மும்பை:  நடிகர் ரிஷிகபூரை பாலிவுட் நட்சத்திரங்கள்  அனுபம்கெர், ஜெனிலியா, அர்ஜுன் கபூர் உள்ளிட்ட பலர் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர்

பாலிவுட்டின் பிரபல நடிகராக எய்ட்டிஸ் காலகட்டங்களில் வலம்வந்தவர்  ரிஷிகபூர். இவர் நடிகர் ராஜ் கபூரின் மகனாவார்.  பாபி என்னும் படத்தின் மூலம் அறிமுகமான ரிஷிகபூர் தன்னுடன் பல படங்களில் நடித்த நீது சிங்கை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியின் மகன் தான் இளம்பெண்களின் கனவு நாயகனாக இருக்கும் ரன்பீர் கபூர். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரிஷி கபூருக்கு எலும்பு மஜ்ஜையில் புற்று நோய் இருப்பது தெரியவந்தது. இதனால்  சிகிச்சைக்காகக்  கடந்த  வருடம் செப்டம்பர் மாதம் இவர் அமெரிக்காவுக்குச் சென்றார். இதையடுத்து அவருக்குப் பல கட்டங்களாக நடைபெற்று வந்த சிகிச்சையில், கடந்த  மே 1 ஆம் தேதி எட்டாவது கட்ட சிகிச்சை தொடங்கியது. மேலும் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாகவும், இன்னும் இரண்டு மாத காலம் அவர் சிகிச்சை பெறுவார் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் நடிகர் ரிஷிகபூரை பாலிவுட் நட்சத்திரங்கள்  அனுபம்கெர், ஜெனிலியா, அர்ஜுன் கபூர் உள்ளிட்ட பலர் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர். மேலும் இதுகுறித்து பதிவிட்டுள்ள ரிஷி கபூர், ‘நான் என் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய இடைவெளியைப் பெற்றதில்லை . நான் 45 ஆண்டுகளாக வேலை செய்கிறேன். நான் 11 மாதங்களுக்குப் பிறகு வந்துள்ளேன்.

நான் மிகவும் புதியதாக உணர்கிறேன். எந்தவொரு வேலையும் செய்யத் தயாராக இருக்கிறேன். இப்போது, ​​எனது பணி வரவேற்கப்படுமா அல்லது மக்கள் என்னைக் குப்பைக்குப் போடுகிறார்களா என்பது எனக்குத் தெரியாது. நான் சிகிச்சையின் போது, ​​எனக்கு  இரத்த மாற்றம் செய்யப்பட்டது. புதிய இரத்தத்துடன் நான் வந்துள்ளேன். நான் மீண்டு வந்ததற்கு என் மனைவி நீது தான் காரணம்’ என்று பதிவிட்டுள்ளார்.