×

பிறந்தநாளில் நடிகர் அபி சரவணனுக்கு கிடைத்த மூன்று விருதுகள்!

இப்படத்தை விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பார்த்து அபி சரவணனுக்கு வாழ்த்து கூறியிருந்தார். ‘கேரளா நாட்டிளம் பெண்களுடனே’ படம் மூலம் கதாநாயகனான அறிமுகமான நடிகர் அபி சரவணன் தொடர்ந்து டூரிங் டாக்கீஸ், பட்டதாரி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டம், நெடுவாசல் மீத்தேன் போராட்டம், விவசாயிகள் போராட்டம் என அனைத்து சமூக நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளும் இவர் சமீபத்தில் நடித்த மாயநதி திரைப்படம் அனைவரின் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. இதில் வெண்பா நாயகியாக நடித்திருந்தார்.
 

இப்படத்தை விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பார்த்து அபி சரவணனுக்கு வாழ்த்து கூறியிருந்தார். 

‘கேரளா நாட்டிளம் பெண்களுடனே’ படம் மூலம் கதாநாயகனான அறிமுகமான நடிகர் அபி சரவணன் தொடர்ந்து டூரிங் டாக்கீஸ், பட்டதாரி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.  ஜல்லிக்கட்டு போராட்டம்,  நெடுவாசல் மீத்தேன் போராட்டம், விவசாயிகள் போராட்டம் என அனைத்து  சமூக நிகழ்வுகளிலும்  கலந்து கொள்ளும் இவர் சமீபத்தில் நடித்த மாயநதி  திரைப்படம் அனைவரின் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. இதில் வெண்பா நாயகியாக நடித்திருந்தார். இப்படத்தை விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பார்த்து அபி சரவணனுக்கு வாழ்த்து கூறியிருந்தார். 

இந்நிலையில் கடந்த வாரம் தனது பிறந்த நாளை கொண்டாடிய அபி சரவணனுக்கு வாழ்த்துக்களும் விருதுகளும் குவிந்தன. Flixwood.Com நிறுவனம் “சோஷியல் ஸ்டார்” எனும் பட்டத்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கையால் வழங்கினர். இதையடுத்து அபிசரவணன் நடிகரும் இயக்குநருமான மனோபாலாவிடம்  சோஷியல் ஸ்டார் பட்டத்தினை பெற்றார். அதேபோல் மதுரையில் நடைபெற்ற ரேடியோ ஒன் விருது நிகழ்வில் ‘மதுரை சிட்டிசன் 2020’ எனும் விருது வழங்கப்பட்டது .ரேடியோ ஒன் விருது வழங்கும் அதே நாளில் மாயநதி திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றதால் அந்த விருதை அவர் சார்பாக அவரின் சகோதரி பெற்றுக்கொண்டார்.

 

அடுத்ததாகக் கொம்பு வச்ச சிங்கம்டா, சாயம் மற்றும் இன்னும் பெயரிடப்படாத 5 படங்களில்  அபி சரவணன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.