×

பிரபல வில்லன் நடிகர் அழுகிய நிலையில் மர்ம மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்!

‘வீரா’ படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்த இந்தி நடிகர் மகேஷ் ஆனந்த் மரணமடைந்தார். அவருக்கு வயது 57. மும்பை: ‘வீரா’ படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்த இந்தி நடிகர் மகேஷ் ஆனந்த் மரணமடைந்தார். அவருக்கு வயது 57. 80 – 90 காலகட்டங்களில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் மகேஷ் ஆனந்த். இவர் தமிழில் விஜயகாந்துடன் பெரிய மருது, ரஜினிகாந்துடன் வீரா ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடந்த 2000-ம் ஆண்டில் நடிகை உஷா பச்சானியைக் காதல்
 

 ‘வீரா’ படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்த இந்தி நடிகர் மகேஷ் ஆனந்த் மரணமடைந்தார். அவருக்கு வயது 57.

மும்பை: ‘வீரா’ படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்த இந்தி நடிகர் மகேஷ் ஆனந்த் மரணமடைந்தார். அவருக்கு வயது 57.

80 – 90 காலகட்டங்களில்  200-க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் மகேஷ் ஆனந்த். இவர் தமிழில் விஜயகாந்துடன் பெரிய மருது, ரஜினிகாந்துடன் வீரா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2000-ம் ஆண்டில் நடிகை உஷா பச்சானியைக் காதல் திருமணம் செய்துகொண்டார். 2 வருடங்கள் திருமண வாழ்க்கையை வாழ்ந்த இவர்கள் பின்னர் விவாகரத்து பெற்றனர். இதையடுத்து 2002-ம் ஆண்டிலிருந்து மும்பை வெர்சோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசிந்து வந்த மகேஷ் ஆனந்த் நடிக்க வாய்ப்பில்லாமல் இருந்து வந்தார். 

இந்நிலையில் மகேஷ் ஆனந்தின் வீட்டில் வேலைசெய்யும் பெண் நேற்று அவரது வீட்டுக்கு வழக்கம்போல் வந்து கதவைத் தட்டியுள்ளார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து போலீஸுக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை தொடர்ந்து,  மகேஷ் ஆனந்தின் வீட்டுக்கு வந்த போலீசார் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது மகேஷ் ஆனந்த் உடல் அழுகிய நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார், அதனை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகேஷ் ஆனந்தின் உடலில் அருகில் மதுபான பாட்டில்கள், உணவு சாப்பிட்ட  தட்டு உள்ளிட்டவை இருந்தாக கூறப்படுகிறது. இவ்விவகாரம் தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.