×

பிரபல நடிகையின் கணவன் தூக்கிட்டு தற்கொலை!

பிரபல சின்னத்திரை நடிகை ராகவின் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல சின்னத்திரை நடிகை ராகவின் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 26 ஆண்டுகளுக்கு மேலாக சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் தனக்கென தனி அடையாளத்தை வைத்திருக்கும் நடிகை ராகவி. இவரது கணவர் சசிகுமார் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வந்தார். தற்போது சசிகுமாரும், ராகவியும் சென்னை வளசரவாக்கத்தில் வசித்துவருகின்றனர். இந்நிலையில் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலுள்ள அடர் வனப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில்
 

பிரபல சின்னத்திரை நடிகை ராகவின் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரபல சின்னத்திரை நடிகை ராகவின் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 26 ஆண்டுகளுக்கு மேலாக சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் தனக்கென தனி அடையாளத்தை வைத்திருக்கும் நடிகை  ராகவி. இவரது கணவர் சசிகுமார் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வந்தார். தற்போது சசிகுமாரும், ராகவியும் சென்னை வளசரவாக்கத்தில் வசித்துவருகின்றனர். 

இந்நிலையில் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலுள்ள அடர் வனப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம் ஒன்று இருப்பதாக காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், சின்னத்திரை நடிகை ராகவியின் கணவர் சசிகுமார் என்பது தெரிய வந்தது. 

கடந்த சில நாட்களுக்கு முன் கடன்சுமையால் பாதிக்கப்பட்டிருந்த சசிகுமார், தான் பணிபுரிந்துவந்த ஸ்டூடியோவிலிருந்த கேமராவை அடகு வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருடன் பணியாற்றிய மகேஷ் என்பவர் சசிகுமாரை கேமரா திருடன் என விமர்சித்ததாகவும், சமூக வலைதளங்களில் சசிகுமாரை பற்றி தவறான பதிவுகளை பரப்பியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சசிகுமார் கடந்த 9 ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில் சசிகுமார் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.