×

பிரபல சின்னதிரை நடிகையின் முடியை பிடித்து அடித்த உதவியாளர்கள்: பரபரப்பான ஷூட்டிங் ஸ்பாட்!

பிரபல சின்னதிரை நடிகையை அவரது உதவியாளர்கள் இருவர் அடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்: பிரபல சின்னதிரை நடிகையை அவரது உதவியாளர்கள் இருவர் அடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல தெலுங்கு டி.வி. நடிகை ராக மாதுரி. இவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ரசிர்களின் மனதை கவர்ந்துள்ளார். இந்நிலையில் நடிகை ராக மாதுரி கடந்த 16-ந் தேதி டி.வி. படப்பிடிப்பை முடித்துவிட்டு காரில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது எதேச்சையாக அவரது கழுத்தை பார்த்தபோது அவர் கழுத்திலிருந்த
 

பிரபல சின்னதிரை நடிகையை அவரது உதவியாளர்கள் இருவர் அடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஐதராபாத்: பிரபல சின்னதிரை நடிகையை அவரது உதவியாளர்கள் இருவர் அடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரபல தெலுங்கு டி.வி. நடிகை ராக மாதுரி. இவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ரசிர்களின் மனதை  கவர்ந்துள்ளார். இந்நிலையில் நடிகை ராக மாதுரி  கடந்த 16-ந் தேதி டி.வி. படப்பிடிப்பை முடித்துவிட்டு காரில் வீட்டுக்கு திரும்பினார்.  அப்போது எதேச்சையாக அவரது கழுத்தை பார்த்தபோது அவர் கழுத்திலிருந்த விலையுயர்ந்த தங்க சங்கிலி காணாமல் போயிருந்தது. இது குறித்து ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த அவர், தன்னிடம் சிகை அலங்கார நிபுணராக வேலை பார்க்கும் ஜோதிகாவும், அவரது உதவியாளரும் தங்க சங்கிலியை திருடிவிட்டனர் என்று புகார் கூறினார். இதையடுத்து ஜோதிகாவையும் அவரது  உதவியாளரையும் போலீசார் விசாரித்தனர். ஆனால்  அவர்கள் சங்கிலியை தாங்கள் எடுக்கவில்லை என்று உறுதியாக கூறினர்.

இதை தொடர்ந்து காணாமல் போன தங்க சங்கிலி மாதுரியின் காரில் கிடந்துள்ளது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. பொய்யான குற்றச்சாட்டை தங்கள் மீது சுமத்தி காவல்நிலையம் வரை அழைத்துச் சென்ற ஆத்திரத்திலிருந்த  ஜோதிகாவும் அவரது உதவியாளரும் படப்பிடிப்பு தளத்திற்கு வந்துள்ளனர். அப்போது அங்கிருந்த மாதுரியின் தலைமுடியைப் பிடித்து இழுத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.