×

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பிரபல சின்னதிரை நடிகர்: அதிர்ச்சியில் திரையுலகம்!?

பெண்கள் இருவரை பாலியல் வன்கொடுமை செய்த டிவி நடிகர் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு: பெண்கள் இருவரை பாலியல் வன்கொடுமை செய்த டிவி நடிகர் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் உள்ள கோரமங்களா பகுதியில் இரண்டு பெண்கள் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி வந்துள்ளனர். இவர்கள் கடந்த 12 ஆம் தேதி இரவு,ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்துள்ளனர். பெண்கள் இருவரும்
 

பெண்கள் இருவரை  பாலியல் வன்கொடுமை செய்த டிவி நடிகர் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ள  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெங்களூரு: பெண்கள் இருவரை  பாலியல் வன்கொடுமை செய்த டிவி நடிகர் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ள  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெங்களூருவில் உள்ள கோரமங்களா பகுதியில் இரண்டு பெண்கள் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி வந்துள்ளனர். இவர்கள் கடந்த 12 ஆம்  தேதி இரவு,ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்துள்ளனர். பெண்கள் இருவரும் உணவுக்காகக் காத்திருந்த சமயத்தில் கதவு தட்டும் சத்தம் கேட்டுள்ளது. ஆர்டர் செய்த உணவு தான் வந்துவிட்டது என்று எண்ணி கதவைத் திறந்து பார்த்துள்ளனர். அப்போது மூவர் கத்தியுடன் வீட்டின் உள்ளே நுழைந்துள்ளனர். பின்பு இரு பெண்களையும் கத்தி முனையில் மிரட்டி அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து நடந்த விஷயத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகத் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து பெண்கள் இருவரும் நடந்தவற்றை தங்கள் நபர்களிடம் கூற அவர்கள் போலீசில்  புகார் தெரிவித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டது  கன்னட டிவி நடிகர் ராகேஷ், கார் டிரைவர் மணிகண்டா, பானி பூரி விற்கும் சூர்யா என்பது தெரியவந்தது. இதையடுத்து பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட மூவரையும் போலீசார்  கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.