×

பாலியல் குற்றவாளிகளுக்கு அறிவுரை சொல்ல வைரமுத்துவுக்கு என்ன தகுதி இருக்கிறது ? – சின்மயி கேள்வி

பாலியல் குற்றவாளிகளுக்கு அறிவுரை கூற வைரமுத்துவை எப்படி அனுமதிக்கிறீர்கள் என பாடகி சின்மயி கேள்வி எழுப்பியுள்ளார். பாலியல் குற்றவாளிகளுக்கு அறிவுரை கூற வைரமுத்துவை எப்படி அனுமதிக்கிறீர்கள் என பாடகி சின்மயி கேள்வி எழுப்பியுள்ளார். பிரபல பின்னணிப் பாடகி சின்மயி சில மாதங்களுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது #MeToo மூலம் பாலியல் புகார் அளித்தார். வெளிநாட்டிற்கு இசை நிகழ்ச்சிக்காக சென்றிருந்த போது வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாக தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் மூலம் பதிவு செய்து
 

பாலியல் குற்றவாளிகளுக்கு அறிவுரை கூற வைரமுத்துவை எப்படி அனுமதிக்கிறீர்கள் என பாடகி சின்மயி கேள்வி எழுப்பியுள்ளார்.

பாலியல் குற்றவாளிகளுக்கு அறிவுரை கூற வைரமுத்துவை எப்படி அனுமதிக்கிறீர்கள் என பாடகி சின்மயி கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரபல பின்னணிப் பாடகி சின்மயி சில மாதங்களுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது #MeToo மூலம் பாலியல் புகார் அளித்தார். வெளிநாட்டிற்கு இசை நிகழ்ச்சிக்காக சென்றிருந்த போது வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாக தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் மூலம் பதிவு செய்து வந்தார் சின்மயி. 

இந்நிலையில், சமீபமாக திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நெடுநல்வாடை திரைப்படத்தின் சக்ஸஸ் மீட்டில் கலந்து கொண்ட வைரமுத்து, பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை பற்றி கருத்து தெரிவித்திருந்தார். அப்போது மனிதனுள் இருக்கும் மிருகத்தை கலை தான் மாற்றும் என்றும், அந்த மிருகத்தை தோல் உரித்தால் தான் இத்தகைய பாலியல் குற்றங்கள் குறையும் என்றும் தெரிவித்திருக்கிறார். இதனை ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டு வருகின்றன. 

வாழைப்பழம் ஏழைகளின் ஆப்பிள்…அது போல் திரைப்படப் பாடல் பாமரனின் கவிதை! – கவிஞர் வைரமுத்து.  

இதைப்பார்த்த, சின்மயி அச்செய்தியை ட்விட்டரில் பகிர்ந்து, ” இது அனைவருக்கும் தெரிந்து விட்ட ரகசியத்தின் மூலம் இழந்த தன் இமேஜை சரி செய்ய எடுக்கும் முயற்சி என்றும், எப்படி இவரை எல்லாம் பாலியல் குற்றவாளிகளுக்கு அறிவுரை கூற வைக்க உங்களுக்கு மனசாட்சி இடம் கொடுக்கிறது ? ” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.