×

பாக்ஸ் ஆபீஸில் பட்டய கிளப்பி வரும் நேர்கொண்ட பார்வை படத்தின் வசூல்! 

சென்னை: நேர்கொண்ட பார்வை படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துள்ளார்.இந்த படத்தில் வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, டெல்லி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். உலகம் முழுவதும் நேர்கொண்ட பார்வை நேற்று வெளியானது. படத்தை காண்பதற்காக அவரது ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் திரையரங்கிற்குச் சென்று பார்த்து மகிழ்கின்றனர்.
 

சென்னை: நேர்கொண்ட பார்வை படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துள்ளார்.இந்த படத்தில் வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, டெல்லி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். 

உலகம் முழுவதும் நேர்கொண்ட பார்வை நேற்று வெளியானது. படத்தை காண்பதற்காக அவரது ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் திரையரங்கிற்குச் சென்று பார்த்து மகிழ்கின்றனர். படத்தை பார்த்தவர்கள் பாசிட்டிவான கருத்துகளையே தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் கிடைத்துள்ளது. சென்னையில் மட்டும் இந்த படத்தின் வசூல் 1.58 கோடி வசூல் சாதனை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் 2019ம் ஆண்டில் வெளியான படங்களில் முதல் நாளே சென்னை பாக்ஸ் ஆபீஸில் அதிகம் வசூலித்த படம் என்ற பெருமையை இந்த படம் பெற்றுள்ளது 

அதுமட்டுமின்றி தமிழகத்தில் நேற்று மட்டும் ரூ. 26 கோடி வசூலித்துள்ளது. மேலும் வார இறுதி நாட்களில் நேர்கொண்ட பார்வை படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.