×

பாகுபலி ஹீரோவை மிரட்டிய நடிகை…!அதிர்ச்சியில் ஆந்திர திரையுலகம் !?

ராணாவால் படத்தை விட்டு வெளியேறிவிடுவேன் என்று சாய் பல்லவி மிரட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஹைதராபாத்: ராணாவால் படத்தை விட்டு வெளியேறிவிடுவேன் என்று சாய் பல்லவி மிரட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் வேணு உடுகுலா இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் விரத பர்வதம் 1992. இந்த படத்தில் முதலில் ஷர்வானந்த் நடிக்க இருப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக அது தடைப்படவே ராணா ஹீரோவாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க இருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் சொன்ன தேதியில்
 

ராணாவால்  படத்தை விட்டு வெளியேறிவிடுவேன் என்று சாய் பல்லவி மிரட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஹைதராபாத்: ராணாவால்  படத்தை விட்டு வெளியேறிவிடுவேன் என்று சாய் பல்லவி மிரட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வேணு உடுகுலா இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் விரத பர்வதம் 1992. இந்த படத்தில்  முதலில் ஷர்வானந்த்  நடிக்க இருப்பதாக இருந்தது. ஆனால்  சில காரணங்களுக்காக அது தடைப்படவே ராணா ஹீரோவாக  ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க இருக்கிறார். 

இப்படத்தின் ஷூட்டிங் சொன்ன தேதியில் ஆரம்பிக்காமல் தாமதமாகி வருகிறது. இதற்கு ராணா தான் காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் சாய் பல்லவியின் மற்ற படங்கள் தடைப்பட்டுப் போயுள்ளது. இதன் காரணமாகக் கோபமான சாய் பல்லவி, படப்பிடிப்பை உடனே துவங்காவிட்டால் நான் படத்திலிருந்து விலகி விடுவேன் என்று மிரட்டல் தொனியில் கூற இயக்குநர்  ஆட்டம்  கண்டு போயுள்ளார். 

இதனால் படத்தை உடனே துவங்க வேண்டிய கட்டாயத்தில் படக்குழு உள்ளது. சாய் பல்லவியின் இந்த கண்டிஷனால்  மற்ற வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு விரத பர்வதம் 1992 படத்தில் கலந்து கொள்ளவுள்ளாராம் ராணா. ஒருசில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் சாய் பல்லவிக்கு இருக்கும் மவுசுதான் அவரின் கண்டிஷனுக்கு காரணம்  என்று டோலிவுட்டில் முணுமுணுக்கின்றனர். 

இந்த படத்தில் நடிகை தபு மனித உரிமை ஆர்வலராக நடிக்க இருக்கிறார். இப்படத்தின் நடிகை பிரியாமணி இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.