×

பல கோடி செலவு செய்து படத்தை வெளியிட்ட விஷால்! காரணம் இது தாங்க!?

பைனான்ஸ் பிரச்னையில் சிக்கிய விஷாலின் அயோக்யா திரைப்படம் ஒருவழியாக அனைத்து பிரச்னைகளையும் தீர்த்து இன்று(மே 11) தியேட்டர்களில் வெளியானது. சென்னை: பைனான்ஸ் பிரச்னையில் சிக்கிய விஷாலின் அயோக்யா திரைப்படம் ஒருவழியாக அனைத்து பிரச்னைகளையும் தீர்த்து இன்று(மே 11) தியேட்டர்களில் வெளியானது. அறிமுக இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான இப்படம் டெம்பர் என்னும் தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்காகும். இதில் ராஷி கண்ணா, கே.எஸ்.ரவிக்குமார்,பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பெண்களை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த
 

பைனான்ஸ் பிரச்னையில் சிக்கிய விஷாலின் அயோக்யா திரைப்படம்  ஒருவழியாக அனைத்து பிரச்னைகளையும் தீர்த்து இன்று(மே 11) தியேட்டர்களில் வெளியானது.

சென்னை: பைனான்ஸ் பிரச்னையில் சிக்கிய விஷாலின் அயோக்யா திரைப்படம்  ஒருவழியாக அனைத்து பிரச்னைகளையும் தீர்த்து இன்று(மே 11) தியேட்டர்களில் வெளியானது.

அறிமுக இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான  இப்படம் டெம்பர் என்னும் தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்காகும். இதில் ராஷி கண்ணா, கே.எஸ்.ரவிக்குமார்,பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பெண்களை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

இப்படம் நேற்று (மே 10 ) வெளியாக இருந்த  சூழலில் கடைசி நேர நிதிப் பிரச்சினையால் திட்டமிட்டபடி  வெளியாகாமல் போனது. தயாரிப்பாளர்கள் சங்க தலைவரான விஷால் படத்திற்கே இப்படி ஒரு நிலைமையா என கோலிவுட்டில் பேச ஆரம்பித்தனர்.படம் ரிலீஸ் ஆகாததால் விஷாலும் அவரது ரசிகர்களும் மிகுந்த மனவருத்தத்தில் இருந்தனர்.

இந்நிலையில் தடைகளை தகர்த்து அயோக்யா  திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. பொதுவாக திரைப்படம் வெளியாக தாமதமானால் விஷால் பல கோடி செலவு செய்து படத்தை வெளியிடுவார். 

அந்த வகையில் நேற்று வெளியாகவிருந்த அயோக்யா திரைப்படம் சில பல காரணங்களால் வெளியாகவில்லை. உடனே விஷால் வழக்கத்துக்கு மாறாக கூடுதலாக செலவு செய்து பிரச்னையை முடித்ததாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம், விஷால்- அனிஷா திருமணம் வரும் 19ம் தேதி நடைபெறவுள்ளதால், கல்யாண சமயத்தில் இது ஒரு அவப்பெயர் ஆகிவிடக்கூடாது என்பதால் தான் விஷால் கோடி கணக்கில் செலவு செய்தாராம்…