×

நேசமணியை ஆண்டவன்தான் கொடுத்தான்…வடிவேலு நெகிழ்ச்சி..!

நடிகர் வடிவேலு #PrayForNesamani என்று ட்ரெண்டானது குறித்து தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். சென்னை: நடிகர் வடிவேலு #PrayForNesamani என்று ட்ரெண்டானது குறித்து தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். 90s,2k கிட்ஸ் என்று அனைவருக்கும் எப்பவும் பிடித்தமான நகைச்சுவை நடிகர்கள் என்றால் அது வடிவேலு. அவரின் படங்கள் ஒன்றும் தற்போது ரீலிஸ் ஆகவில்லை தான்,ஆனாலும் என்றுமே சமூக வலைத்தளங்களில் ஏதாவது ஒரு வடிவத்தில் இடம்பெற்றுக் கொண்டே இருப்பார். அதற்கு காரணம் ரசிகர்களிடையே அவர் ஏற்படுத்திய தாக்கம் தான். தனக்கு கொடுக்கப்பட்ட
 

நடிகர் வடிவேலு #PrayForNesamani என்று ட்ரெண்டானது குறித்து தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.

சென்னை: நடிகர் வடிவேலு #PrayForNesamani என்று ட்ரெண்டானது குறித்து தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். 

90s,2k கிட்ஸ் என்று அனைவருக்கும் எப்பவும் பிடித்தமான நகைச்சுவை நடிகர்கள் என்றால் அது வடிவேலு. அவரின் படங்கள் ஒன்றும் தற்போது ரீலிஸ் ஆகவில்லை தான்,ஆனாலும் என்றுமே சமூக வலைத்தளங்களில் ஏதாவது ஒரு வடிவத்தில் இடம்பெற்றுக் கொண்டே இருப்பார். 

அதற்கு காரணம் ரசிகர்களிடையே அவர் ஏற்படுத்திய தாக்கம் தான். தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரில் கச்சிதமாக நடித்து ரசிகர்களை தம்பக்கம் இழுக்க வல்லவர். இந்த நிலையில் நேற்றிலிருந்து சமூக வலைத்தளங்களில் உலக அளவில் ட்ரெண்ட் அடிக்கிறது ப்ரெண்ட்ஸ் படத்தின் நேசமணி கேரக்டர். 

Engineers Learners என்ற பேஸ்புக் பக்கத்தில் சுத்தியல் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, அது நேசமணி தலையில் விழுந்தது என்று கார்த்தி பிரபாகர் பதிலளித்துள்ளார். அடுத்தடுத்த கமென்ட்களில், நேசமணிக்காக பிரார்த்தனை செய்யவும் என்ற பெயரில், #Pray_for_Nesamani என்ற ஹாஷ்டாகையும் பயன்படுத்தியிருந்தார்.  உடனே அந்த பதிவின் கீழ் ‘அவர் எப்படியிருக்கிறார்? என மற்றொருவர் கேட்க, ‘அவர் இப்போது நலம். அவருடைய அணியினர் உடனடியாக அவர்மீது தண்ணீரை ஊற்றி முதலுதவி கொடுத்துவிட்டனர்’ என்று பதிலளித்தார். 

இதன்மூலம் நேற்று இரவு முதல் #PrayForNesamani என்ற ஹாஷ்டாக் உலகளவில் ட்ரெண்டானது. இந்த நிலையில் இது குறித்து பிரபல செய்தி தொலைக்காட்சி ஒன்று நடிகர் வடிவேலுவிடம் கலந்துரையாடியுள்ளனர். அப்போது பேசிய அவர் ‘நேசமணி போன்ற கேரக்டர்களுக்கு கிடைக்கும் வரவேற்பு என்பது ஆண்டவன் எனக்கு அளித்த பரிசு என்றார். நான் எதுவமே செய்யவில்லை. எல்லாத்தூக்கும் என்னுடையே ரியாக்சன் பயன்படுத்துகிறார்கள். தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள். என் மாமியார் இறந்து 10நாளாகிறது அந்த சோகத்தில் இருக்கிறேன். ப்ளீஸ் விட்டுவிடுங்கள்’ என்று கூறியுள்ளார்.