×

நீட் தேர்வால் தற்கொலை செய்து கொள்பவர்கள் எல்லாம் அனிதா இல்லை: நடிகை கஸ்தூரியின் ட்வீட்

நடிகை கஸ்தூரி நீட் தேர்வால் தற்கொலைக்கு முயற்சி செய்யும் மாணவர்களுக்கு அறிவுரை கூறும் வகையில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். சென்னை: நடிகை கஸ்தூரி நீட் தேர்வால் தற்கொலைக்கு முயற்சி செய்யும் மாணவர்களுக்கு அறிவுரை கூறும் வகையில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள், நேற்று வெளியானது. இதில், 59 ஆயிரத்து 785 தமிழக மாணவர்கள் மருத்துவப் படிப்புக்குத் தகுதி பெற்றுள்ளனர். அதில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கே.ஸ்ருதி தமிழ்நாட்டில் முதல் இடத்தையும்,
 

நடிகை கஸ்தூரி நீட் தேர்வால் தற்கொலைக்கு முயற்சி செய்யும் மாணவர்களுக்கு அறிவுரை கூறும் வகையில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். 

சென்னை: நடிகை கஸ்தூரி நீட் தேர்வால் தற்கொலைக்கு முயற்சி செய்யும் மாணவர்களுக்கு அறிவுரை கூறும் வகையில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். 

மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள், நேற்று வெளியானது. இதில், 59 ஆயிரத்து 785 தமிழக மாணவர்கள் மருத்துவப் படிப்புக்குத் தகுதி பெற்றுள்ளனர். அதில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கே.ஸ்ருதி தமிழ்நாட்டில் முதல் இடத்தையும், இந்திய அளவில் 57-வது இடத்தையும் பிடித்துள்ளார்.இதில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ரிதுஸ்ரீ மற்றும் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வைஷ்யா இருவரும் போதிய மதிப்பெண்கள் பெறாததால் தற்கொலை செய்து கொண்டனர். இந்த மாணவிகளின் மரணம்  தமிழகத்தைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இந்த நிலையில் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொள்பவர்களுக்கு நடிகை கஸ்தூரி அறிவுரை கூறி பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில்,’நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. அதனை தொடர்ந்து தமிழகத்தில் இரண்டு மாணவிகள் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட செய்தி. நீட் தேர்வோ, பள்ளி இறுதி தேர்வோ, எந்த தோல்வியும் தாற்காலிகம் என்பதை பிள்ளைகள் உணரவேண்டும். பிள்ளைகள் மட்டுமல்லாது, அவர்களை சுற்றி உள்ளோரும் இதை புரிந்துகொள்ளவேண்டும். நம்மவர்கள் பலரும், யாராவது தடுக்கிவிட்டால், அதை சொல்லிக்காட்டியே அந்த நபரை மன உளைச்சலில் வீழவைப்பதில் சூரர்கள்.. மற்றவர் கஷ்டத்தில் மீன் பிடிக்கும் கில்லாடிகள். தயவு செய்து சிறார்கள் படிப்பும் வாழ்க்கையும் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கவனமாக நடக்கலாமே? தேர்வில் ஒரு முறை தோற்றுவிட்டால் மனம் தளராமல் அதை சவாலாக ஏற்று மீண்டும் முயலவும் வெல்லவும் பிள்ளைகளுக்கு போதிய ஊக்கத்தை, ஆதரவை பெற்றோர்களும் ஆசிரியர்களும் நல்கவேண்டும். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் பல பெற்றோர்களே முதிர்ச்சியில்லாமல் நடந்துகொள்கிறார்கள். பெற்றோருக்கு முதலில் கவுன்சிலிங் தேவைப்படுகிறது!

இது போதாது என்று அரசியல் வேறு. நம் அரசியல்வாதிகள் , உண்மையாகவே கொள்கை ரீதியாக நீட்-ஐ எதிர்ப்பவர்கள் சிலர் என்றால், தங்களுக்கு மெடிக்கல் சீட்டுக்கு வசூல் ஆகிக்கொண்டிருந்த டொனேஷன் கமிஷன் வகையறா நின்ற வயிற்றெரிச்சலில் பலர். அரசியல் தீர்வு வரும்போது வரட்டும்; அதுவரை மாணவர்கள் மனதை அலைபாய விடவேண்டாம். தற்கொலை செய்துகொள்வோர் எல்லாம் அனிதா அல்ல. அனிதாவைப் போல தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற எண்ணத்தைத் தூண்டுபவர்கள் மனிதர்களே அல்ல.

பிள்ளைகளே, நீங்கள் நினைக்கலாம், உங்கள் வாழ்க்கையின் அர்த்தமே போயிற்று, உங்கள் பலவருட கனவு தவிடுபொடியாயிற்று என்றெல்லாம். ஆனால் உண்மை என்ன தெரியுமா? வாழ்க்கை சக்கரம் எப்படி சுழலும் என்று யாருக்குத் தெரியும்? இன்று கீழே இருப்பவர் நாளை மேலே செல்வார்…நாளை என்ன நடக்கும் என்று வாழ்ந்து பார்த்தால் தானே தெரியும்? இன்னும் சொல்லப் போனால், இந்த உலகம் ஒரு பரிச்சையோடு நின்று விடுமா?எதிர்காலத்தில் எத்தனையோ சாதனைகள் உங்களுக்காகவே காத்துக்கொண்டு உள்ளன தெரியுமா?

allowfullscreen

சந்தோஷங்கள் மட்டுமே வாழ்க்கை இல்லையே, உலகம் உருண்டை, சுழலதான் செய்யும், இல்லையா? பகலும் இரவும் மாறி மாறித்தான் வரும்… இருள் வந்தால் அடுத்து வெளிச்சம் வரும் என்றுதானே பொருள்? இருளை பார்த்து மிரண்டு அவசரப்பட்டு வெளிச்சத்தைப் பார்க்காமலே போய்விடலாமா?

நாளை வாழ்க்கையில் இன்னும் எவ்வளவோ ஏமாற்றங்களைச் சந்திக்கவேண்டிவரலாம், நம்மில் பெருவாரியானவர்களுக்கு வாழ்க்கை என்பதே போராட்டம்தானே ? அந்த போராட்டத்தில் ஜெயிக்க இந்த சின்ன தோல்வி ஒரு பயிற்சி என்று எடுத்துக்கொள்ளுங்கள் செல்லங்களே! என் சொந்த அனுபவத்தில் சொல்கிறேன், எதை இழந்தாலும் நம்பிக்கையும் போராட்ட குணத்தையும் கைவிடாதீர்கள் செல்வங்களே!