×

‘நீ எல்லாம் ஒரு ஆம்பளையாடா? வாய்ப்புக்காக யார்கூட வேண்டுமானாலும் …”………” சனம்ஷெட்டி ஆடியோ..!

உன் மேல தான் தப்பு.. என் மேல தான் தப்பு என்று தர்ஷனும் சனம் ஷெட்டியும் ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்காக குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றனர். இப்போ எல்லாம் போன் எடுத்தாலே ஒரே தர்ஷன்- சனம் ஷெட்டி பிரச்சனை தான். பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் தர்ஷன். இவர் மீது மாடல் அழகியும் தர்ஷனின் காதலியுமான சனம் ஷெட்டி நிச்சயதார்த்தம் முடிந்த பின்பு திருமணத்தை நிறுத்தியது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார்
 

உன் மேல தான் தப்பு.. என் மேல தான் தப்பு என்று தர்ஷனும் சனம் ஷெட்டியும் ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்காக குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றனர்.

இப்போ எல்லாம் போன் எடுத்தாலே ஒரே தர்ஷன்- சனம் ஷெட்டி பிரச்சனை தான். பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர்  தர்ஷன். இவர் மீது  மாடல் அழகியும்  தர்ஷனின் காதலியுமான  சனம் ஷெட்டி  நிச்சயதார்த்தம் முடிந்த பின்பு திருமணத்தை நிறுத்தியது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் கொடுத்தார்.

மேலும் நான் இதுவரை தர்ஷனுக்காக 15 லட்சம் ரூபாய்  வரை செலவு செய்துள்ளேன் என்றும் இப்போது அவர் என்னை திருமணம் செய்ய மறுக்கிறார் என்றும் புகார் கொடுத்தார். இதுமட்டுமில்லாமல், இதற்கெல்லாம் பிக் பாஸில் கலந்து கொண்ட ஷெரினும் காரணம் என்றும் கூறினார். 

அந்த புகாருக்கு விளக்கம் அளித்த தர்ஷன், எனக்கும் அவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது உண்மை. அவர் எனக்கு அவ்வளவு பணம் செலவு செய்ததும் உண்மை. ஆனால் நான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வரும் போது சனம் ஷெட்டி அவருடைய முன்னாள் காதலனுடன் இருக்கும் புகைப்படங்களையும் அவர் பிகினி போட்டுக் கொண்டு ஒரு போட்டோஷூட் கொடுத்த புகைப்படங்களையும் பார்த்தேன். அதனால் தான் அவரை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கவில்லை என்று கூறினார். 

இதனிடையே சனம் ஷெட்டியும் அவரது முன்னாள் காதலரும் ஒன்றாக இருக்கும் படி புகைப்படம் எடுத்த ரம்யாவும், அவரது கணவர் சத்யாவும்,  சனம் மீது தான் தவறு என்பது போல கூறி பேட்டியளித்தனர். இது ஒருபுறமிருக்க பிக் பாஸ் போட்டியாளர் வனிதா, தர்ஷன் தான் தப்பு. இதெல்லாம் அவருக்கு முன்னாலேயே தெரியாதா’ என தர்ஷனை வெளுத்து வாங்கினார். 

உன் மேல தான் தப்பு.. என் மேல தான் தப்பு என்று தர்ஷனும் சனம் ஷெட்டியும் ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்காக குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், தர்ஷனும் சனம் ஷெட்டியும் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில் சனம் ஷெட்டி. நீ எல்லாம் ஒரு ஆம்பளையாடா?.. எனக்கு வாய்ப்பு கிடைக்க நான் யார் கூட வேணாலும் இருப்பேன்.. அதற்கு நீ தான் நோ சொன்ன’ என்று கூறுகிறார். இந்த ஆடியோ இப்போது வைரல் ஆகி வருவதால், இதனை பலரும் விமர்சித்து வருகின்றனர்.