‘நான் பாலியல் உறவில் ஆக்ட்டிவாக இருந்தது என் பெற்றோருக்கு அதிர்ச்சியை தந்தது’ : கங்கனா சர்ச்சை பேச்சு!
இன்றைய காலகட்டத்தில் பெற்றோர் தங்களது பிள்ளைகள் பாலியல் உறவில் ஈடுபடுவது தெரிந்தால் மகிழ்ச்சியடைய வேண்டும்.
மும்பை: பெற்றோர் தங்களது பிள்ளைகளைப் பாதுகாப்பாக உறவு கொள்ளுமாறு ஊக்கப்படுத்த வேண்டும் என்று நடிகை கங்கனா ரனாவத் கேட்டுக்கொண்டுள்ளார்.
நடிகை கங்கனா ரனாவத் பாலிவுட்டில் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவராக வலம்வருகிறார். அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் பல சமூக பிரச்னைகள் குறித்து பொதுத்தளங்களில் பேசி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை கங்கனா, ‘ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பாலியல் உறவு என்பது முக்கியமான ஒன்றாகும். பாலியல் உறவு வைத்துக்கொள்ள விரும்பினால் அந்த சிந்தனையிலிருந்து விலகியிருக்காமல் வைத்துக்கொள்ள வேண்டும். திருமணத்தால் கிடைக்கும் உறவிடமே நாம் அனைத்து உணர்ச்சிகளையும் கொட்ட வேண்டும் என்ற முறை முன்னொரு காலத்திலிருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் பெற்றோர் தங்களது பிள்ளைகள் பாலியல் உறவில் ஈடுபடுவது தெரிந்தால் மகிழ்ச்சியடைய வேண்டும். அவர்கள் பாதுகாப்பாக உறவு வைத்து கொள்ள அறிவுறுத்த வேண்டும்’ என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘ நான் பாலியல் உறவில் ஆக்ட்டிவாக இருப்பதைத் தெரிந்துகொண்ட எனது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்’ என்று கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.