×

நான் காதலிப்பது இவரை தான்: ராஜா ராணி சீரியல் ஆல்யா மானசா ஓபன் டாக்!

ராஜா ராணி சீரியலில் நடித்து வரும் ஆல்யா மானசா தான் காதலிப்பது யார் என்பது குறித்து மனம் திறந்துள்ளார். சென்னை: ராஜா ராணி சீரியலில் நடித்து வரும் ஆல்யா மானசா தான் காதலிப்பது யார் என்பது குறித்து மனம் திறந்துள்ளார். வெள்ளித் திரை நடிகைகளுக்கு இணையாகத் தொலைக்காட்சி தொகுப்பாளர்களும், சீரியல் நடிகைகளும் பிரபலமாகி வருகின்றனர். அந்தவகையில் ‘ராஜா ராணி’ சீரியலில் நடித்து வரும் ஆல்யா மானசாவுக்கு ரசிகர்கள் ஏராளம். சீரியலையும் தாண்டி அவரை இன்ஸ்டாகிராமில் 13 லட்சத்திற்கும்
 

ராஜா ராணி சீரியலில் நடித்து வரும் ஆல்யா மானசா தான் காதலிப்பது யார் என்பது குறித்து மனம் திறந்துள்ளார்.

சென்னை: ராஜா ராணி சீரியலில் நடித்து வரும் ஆல்யா மானசா தான் காதலிப்பது யார் என்பது குறித்து மனம் திறந்துள்ளார்.

வெள்ளித் திரை நடிகைகளுக்கு இணையாகத் தொலைக்காட்சி தொகுப்பாளர்களும், சீரியல் நடிகைகளும் பிரபலமாகி வருகின்றனர். அந்தவகையில் ‘ராஜா ராணி’ சீரியலில் நடித்து வரும் ஆல்யா மானசாவுக்கு ரசிகர்கள் ஏராளம்.

சீரியலையும் தாண்டி அவரை இன்ஸ்டாகிராமில் 13 லட்சத்திற்கும் அதிகமானோர் பாலோ செய்து வருகின்றனர்.  அதற்கு முக்கியக் காரணம், அடிக்கடி அவர் வெளியிட்டு வரும் டப்ஸ்மாஷ் வீடியோக்கள் தான். முன்னதாக மானஸ் என்பவரை காதலித்து வந்த மானசா கருத்து வேறுபாட்டின் காரணமாக அவரை பிரிந்துள்ளார். இதற்கு முக்கிய காரணம் ராஜா ராணி சீரியலில் அவருடன் நடிக்கும் சஞ்சீவ் கார்த்திக் உடன்  மானசா  நெருக்கமாக இருந்ததே என்று கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், ராஜா ராணி படத்தில் நஸ்ரியா பேசும் டயலாக்கை டப்ஸ்மாஷ் செய்திருந்தார் மானசா . அதில், ‘எஸ்-க்காக’ என அவர் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து மானசா இணையதள ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், தான்  சையது அசாரூதின் புகாரி என்பவரைக் காதலிப்பதாக வெளிப்படையாகக் கூறியுள்ளார்.இது  ராஜா ராணியில் சின்னய்யாவாக நடிக்கும் சஞ்சீவ் கார்த்தியின் உண்மையான பெயர் என்று சின்னதிரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இந்நிலையில் சஞ்சீவ் கார்த்திக் மானசாவுக்கு மோதிரம் ஒன்று பரிசாக அளித்திருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.