×

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை?: மனம் திறக்கும் தமன்னா

பிரபல நடிகை தமன்னா திரையுலகில் நடிகைகளுக்கு இருக்கும் பாலியல் தொல்லை குறித்த தனது கருத்தினை பகிர்ந்துள்ளார். சென்னை: பிரபல நடிகை தமன்னா திரையுலகில் நடிகைகளுக்கு இருக்கும் பாலியல் தொல்லை குறித்த தனது கருத்தினை பகிர்ந்துள்ளார். திரையுலகம் மட்டுமின்றி பணிக்குச் செல்லும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை குறித்து மீ டூ என்ற இயக்கத்தின் மூலம் சமூக வலைத்தளங்களில் பலரும் பேசி வருகின்றனர். இந்த மீ டூ இயக்கம் ஹாலிவுட்டில் தொடங்கி கோலிவுட் வரை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
 

பிரபல நடிகை தமன்னா திரையுலகில் நடிகைகளுக்கு இருக்கும் பாலியல் தொல்லை குறித்த தனது கருத்தினை பகிர்ந்துள்ளார்.

சென்னை: பிரபல நடிகை தமன்னா திரையுலகில் நடிகைகளுக்கு இருக்கும் பாலியல் தொல்லை குறித்த தனது கருத்தினை பகிர்ந்துள்ளார்.

திரையுலகம் மட்டுமின்றி பணிக்குச் செல்லும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை குறித்து மீ டூ என்ற இயக்கத்தின் மூலம் சமூக வலைத்தளங்களில் பலரும் பேசி வருகின்றனர். இந்த மீ டூ இயக்கம் ஹாலிவுட்டில் தொடங்கி கோலிவுட் வரை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தமிழ்,தெலுங்கு என படு பிசியாக நடித்து வரும் நடிகை தமன்னா, நடிகைகளுக்கு இருக்கும் பாலியல் தொல்லை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். நடிகைகள் சிலர் திரையுலகில் தங்களுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக குற்றம்சாட்டி வருகின்றனர். பல கோடி ரூபாய் முதலீட்டில் திரைப்படம் எடுக்கும்போது, அதில் நடிகர், நடிகையர் உட்பட தொழில்நுட்ப கலைஞர் என ஏராளமானோர் அந்த படத்தோடு சம்மந்தப்பட்டு இருக்கின்றனர்.

அப்படி முழுவீச்சில் திரைப்படத்தின் மீது கவனம் செலுத்தும் சமயத்தில் நடிகைகளிடம் தவறாக முயற்சிப்பார்களா என்ற கேள்வி எனக்குள் இருக்கிறது. எனக்கு அதுபோன்று எவ்வித பாலியல் தொல்லையும் நேர்ந்ததில்லை என்றார்.

மேலும், தான் யாரையும் காதலித்தது இல்லை எனவே காதல் திருமணமோ, பெற்றோர்கள் நிச்சயிக்கும் திருமணமோ எதுவாக இருந்தாலும், அதற்கான நேரம் வரும்போது கட்டாயம் நடக்கும் எனவும் தமன்னா தெரிவித்துள்ளார்.