×

நடிகை ரஷ்மிகாவை அழவைத்த இயக்குநர்! எதுக்கு தெரியுமா?

நடிகை ரஷ்மிகா படப்பிடிப்பில் இயக்குநர் ஒருவர் அழவைத்து விட்டதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். சென்னை: நடிகை ரஷ்மிகா படப்பிடிப்பில் இயக்குநர் ஒருவர் அழவைத்து விட்டதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் படத்தின் மூலம் அறிமுகமாகிப் பிரபலமானவர் நடிகை ரஷ்மிகா. அப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனத்தைக் கொள்ளையடித்த இவர் தற்போது தமிழில் கார்த்தியுடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும் விஜய் தேவரைக்கொண்டவுடன் டியர் காம்ரேட் படத்திலும் நடித்து வருகிறார். இவர் தற்போது கீதா கோவிந்தம் படத்தின் படப்பிடிப்பில்
 

நடிகை ரஷ்மிகா படப்பிடிப்பில் இயக்குநர் ஒருவர் அழவைத்து விட்டதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 

சென்னை: நடிகை ரஷ்மிகா படப்பிடிப்பில் இயக்குநர் ஒருவர் அழவைத்து விட்டதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 

தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் படத்தின் மூலம் அறிமுகமாகிப் பிரபலமானவர் நடிகை ரஷ்மிகா. அப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனத்தைக் கொள்ளையடித்த இவர் தற்போது தமிழில் கார்த்தியுடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும் விஜய் தேவரைக்கொண்டவுடன் டியர் காம்ரேட் படத்திலும் நடித்து வருகிறார். 

இவர் தற்போது கீதா கோவிந்தம் படத்தின் படப்பிடிப்பில் நடந்த நிகழ்வு பற்றி சமீபத்தில் கூறியுள்ளார். அதில் ‘ஒரு நாள் படப்பிடிப்பு தளத்திற்கு தாமதமாகச் சென்று விட்டேன். உடனே அந்த செட்டில் இருந்த யாரும் என்னுடன் சரியாக பேசவில்லை. பின்பு என்ன நடக்கிறது என்று புரியாமல் அதே இடத்தில் உட்கார்ந்து அழுக்க ஆரம்பித்து விட்டேன்.

இந்த நிலை தொடரவே இயக்குநரிடம் சென்று இதை பற்றி கூறினேன். அப்போது தான் எனக்கு தெரிய வந்தது அது படப்பிடிப்பில் நடந்த விளையாட்டு என்று.. அதுவும் எதற்கு என்றால் அன்றைய காட்சியில் என்னுடைய முகம் சோகமாக இருக்கவேண்டும் என்றும், அதுவும் தத்துரூபமாக இருக்க வேண்டும் என்பதால் அனைவரும் திட்டமிட்டு இப்படி செய்ததாக இயக்குநர் கூறினார். ஆனால் அந்த பாதிப்பிலிருந்து நான் வெளிவரவே நிறைய நேரம் ஆனது’ என்று கூறினார். 

இதையும் படிங்க:பெயர் இல்லாமல் வாக்களித்த சிவகார்த்திகேயன் விவகாரத்தில் அதிகாரி மீது நடவடிக்கை! சத்ய பிரதா சாஹூ அறிவிப்பு!