×

திருமணத்திற்கு முன்பு படுக்கைக்கு அழைத்த பிரபல நடிகர்: பதறிப் போய் திருமணத்தை நிறுத்திய நடிகை!

பிரபல தொலைக்காட்சி நடிகர் சித்தார்த் சாகரை திருமணம் செய்துகொள்ளவிருந்த நிலையில் திடீரென அவரை பிரிவதாக, டிவி நடிகை சுபுஹி ஜோஷி அறிவித்துள்ளார். மும்பை: பிரபல தொலைக்காட்சி நடிகர் சித்தார்த் சாகரை திருமணம் செய்துகொள்ளவிருந்த நிலையில் திடீரென அவரை பிரிவதாக, டிவி நடிகை சுபுஹி ஜோஷி அறிவித்துள்ளார். காமெடி சர்கஸ், தி கபில் சர்மா ஷோ போன்ற நிகழ்ச்சிகள் மூலமாக பிரபலமானவர் நடிகர் சித்தார்த் சாகர். இவரும், நடிகை சுபுஹியும் 2014ம் ஆண்டு முதல் நண்பரகளாக பழகி வந்தனர்.
 

பிரபல தொலைக்காட்சி நடிகர் சித்தார்த் சாகரை திருமணம் செய்துகொள்ளவிருந்த நிலையில் திடீரென அவரை பிரிவதாக, டிவி நடிகை சுபுஹி ஜோஷி அறிவித்துள்ளார்.

மும்பை: பிரபல தொலைக்காட்சி நடிகர் சித்தார்த் சாகரை திருமணம் செய்துகொள்ளவிருந்த நிலையில் திடீரென அவரை பிரிவதாக, டிவி நடிகை சுபுஹி ஜோஷி அறிவித்துள்ளார்.

காமெடி சர்கஸ், தி கபில் சர்மா ஷோ போன்ற நிகழ்ச்சிகள் மூலமாக பிரபலமானவர் நடிகர் சித்தார்த் சாகர். இவரும், நடிகை சுபுஹியும் 2014ம் ஆண்டு முதல் நண்பரகளாக பழகி வந்தனர். நாளடைவில் இவர்களுக்குள் இருந்த நட்பு காதலாக மாறியதாக அறிவித்தனர். ஆனால் சில நாட்களில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்ததாக அறிவித்தனர். 

இதற்கிடையே, சுபுஹி, காமெடி கிளாசஸ், பி சி பாடே போன்ற டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானார். இதையடுத்து, மீண்டும் சித்தார்த் அவருடன் நெருங்கி பழக தொடங்கினர். பின்பு 5 மாதங்களுக்கு முன்பாக, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். 

இதன்பேரில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிவடைந்து, திருமணத்தை எதிர்பார்த்து அனைவரும் காத்து இருந்தனர். ஆனால் மீண்டும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளைக் கூற தொடங்கியுள்ளனர். இதன்படி, சித்தார்த் தன்னை அடிக்கடி ஆபாசமாகத் திட்டுவதோடு, ஓயாமல் படுக்கைக்கு அழைக்கிறார். திருமணத்திற்கு முன்பே உடலுறவில் ஆர்வம் காட்டுகிறார் என்று வரவில்லை என்றால் என்னை அடித்து முரட்டு தனமாக நடந்து கொள்கிறார் என்று அடுக்கடுக்காக குற்றம் சாட்டினார். இதனால் அவரை திருமணம் செய்துகொள்ளும் முடிவைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகக் கூறியுள்ளார். 

இந்த விவகாரம் பற்றி சித்தார்த் கூறுகையில், ‘சுபுஹி நல்லவராக இருந்தாலும், அவருக்கு இந்த திருமணத்தில் பெரிய ஈடுபாடு இருப்பது போல் தெரியவில்லை. வேறு எதோ உள்நோக்கத்துடன் அவர் செயல்படுவதாக, எனது அம்மா சந்தேகிக்கிறார். அதை உறுதிப்படுத்தும் வகையில் சுபுஹியின் நடவடிக்கையும் அப்படி தான் உள்ளது. எனவே, நாங்கள் பிரிந்து செல்வது தான் நல்லது’ என்று கூறியுள்ளார்.