×

திருமணத்திற்கு பிறகு புதிய திரைப்படத்தில் இணைந்த ஆர்யா- சாயிஷா 

ஆர்யா- சாயிஷா திருமணம் முடிந்த பிறகு இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னை: ஆர்யா- சாயிஷா திருமணம் முடிந்த பிறகு இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழ் திரையுலகின் காதல் ஜோடி, ஆர்யா-சாயிஷாவுக்கு கடந்த 10-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணத்துக்குத் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகினர் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். அதையடுத்து திருமணவரவேற்பு நிகழ்ச்சி கடந்த வியாழக்கிழமை சென்னையில் நடைபெற்றது. இந்நிலையில்
 

ஆர்யா- சாயிஷா திருமணம் முடிந்த பிறகு இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

சென்னை: ஆர்யா- சாயிஷா திருமணம் முடிந்த பிறகு இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

தமிழ் திரையுலகின் காதல் ஜோடி, ஆர்யா-சாயிஷாவுக்கு கடந்த 10-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணத்துக்குத் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகினர் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். அதையடுத்து  திருமணவரவேற்பு நிகழ்ச்சி கடந்த வியாழக்கிழமை சென்னையில் நடைபெற்றது. 

இந்நிலையில் கஜினிகாந்த், காப்பான் திரைப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஆர்யா-சாயிஷா இணைந்து ‘டெடி’ படத்தில் நடிக்கவுள்ளனர். டிக் டிக் டிக் படத்தின் இயக்குநர் சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்தில் கரடி” முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 

மேலும் இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த செய்திகள் விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.