×

திருமணத்திற்கு பிறகு ஆர்யா- சாயிஷா எடுத்த அதிரடி முடிவு

திருமணத்திற்குப் பிறகு ஆர்யா- சாயிஷா இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. சென்னை: திருமணத்திற்குப் பிறகு ஆர்யா- சாயிஷா இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. ஆர்யா- சாயிஷா ஜோடி கஜினிகாந்த் படத்தில் இணைந்து நடித்துத்திருந்தனர். அப்படத்தின் மூலம் தான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தாக கூறப்படுகிறது. பின்பு சூர்யா நடிப்பில் உருவாகிவரும் காப்பான் படத்திலும் இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது திருமணம் நடைபெற்ற பின், இருவரும் சேர்ந்து
 

திருமணத்திற்குப் பிறகு ஆர்யா- சாயிஷா  இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. 

சென்னை: திருமணத்திற்குப் பிறகு ஆர்யா- சாயிஷா  இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. 

ஆர்யா- சாயிஷா ஜோடி கஜினிகாந்த் படத்தில் இணைந்து நடித்துத்திருந்தனர். அப்படத்தின் மூலம் தான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தாக கூறப்படுகிறது. பின்பு சூர்யா நடிப்பில் உருவாகிவரும் காப்பான் படத்திலும் இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர். 

இந்த நிலையில் தற்போது திருமணம் நடைபெற்ற பின், இருவரும் சேர்ந்து நடிக்கவுள்ளனர்.  ‘டெடி’ என்று பெயரிட்டுள்ள இப்படத்தை இயக்குநர் சக்தி செளந்திரராஜன் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘மிருதன்’ மற்றும் ‘டிக் டிக் டிக்’ போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். 

ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. ஆக்சன் திரில்லர் படமாக உருவாகியுள்ள படத்தின் படப்பிடிப்பு பல்வேறு நாடுகளில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் திருமணத்திற்குப் பிறகு ஆர்யா- சாயீஷா இணைந்து நடிப்பதால் இவரது ரசிகர்களிடம் படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரிக்க செய்துள்ளது.