×

திடீரென சம்பளத்தை உயர்த்திய ராஷ்மிகா: எவ்வளவு தெரியுமா? 

நடிகை ராஷ்மிகா திடீரென தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை: நடிகை ராஷ்மிகா திடீரென தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. அப்படத்தின் மூலம் தெலுங்கு மட்டுமின்றி தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம்பிடித்துள்ளார். இவர் மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த ‘டியர் காம்ரேட்’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. அதைத்தொடர்ந்து தற்போது தமிழில் ‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்கிய ராஜ் கண்ணன்
 

நடிகை ராஷ்மிகா  திடீரென தனது சம்பளத்தை  உயர்த்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை: நடிகை ராஷ்மிகா  திடீரென தனது சம்பளத்தை  உயர்த்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. அப்படத்தின் மூலம் தெலுங்கு மட்டுமின்றி தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம்பிடித்துள்ளார். இவர் மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த ‘டியர் காம்ரேட்’ படம் விரைவில் வெளியாகவுள்ளது.

அதைத்தொடர்ந்து தற்போது தமிழில் ‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்கிய ராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி ‘தளபதி 64’ படத்திலும் இவரே நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், பட வாய்ப்புகள் அதிகம் குவிவதால் ராஷ்மிகா தனது சம்பளத்தை உயர்த்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக நடித்த படங்களில் ரூ. 40 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ராஷ்மிகா, தற்போது ரூ.60 லட்சம் முதல் ரூ. 80 லட்சம் வரை கேட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இதைக்கேட்ட சிலர் இன்னும் பெரிய அளவில் வளரவே இல்லை அதற்குள் இவ்வளவு சம்பளமா என்று ராஷ்மிகாவை விமர்சனம் செய்து வருகின்றனர்.