×

தருமை ஆதீனத்திடம் ஆசி பெற்ற ரஜினி மகள்…வைரல் போட்டோஸ்!

அடிக்கடி மகன் வேத் செய்யும் குறும்புகளையும் தவறாமல் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த்தின் இளையமகள் சவுந்தர்யாவுக்கும் தொழில் அதிபர் மகனும் நடிகருமான விசாகனுக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு, பொன்னியின் செல்வன் வெப்சீரிஸில் தீவிரமாக பணியாற்றி வரும் இவர் அடிக்கடி மகன் வேத் செய்யும் குறும்புகளையும் தவறாமல் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். தந்தையை போல ரஜினியின் மகள்களுக்கும் ஆன்மீகத்தில் அதீத ஈடுபாடு என்றே
 

அடிக்கடி மகன் வேத் செய்யும் குறும்புகளையும்  தவறாமல் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். 

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த்தின் இளையமகள் சவுந்தர்யாவுக்கும் தொழில் அதிபர் மகனும் நடிகருமான விசாகனுக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி   திருமணம் நடைபெற்றது.

 

திருமணத்திற்குப் பிறகு,  பொன்னியின் செல்வன் வெப்சீரிஸில்  தீவிரமாக பணியாற்றி வரும் இவர் அடிக்கடி மகன் வேத் செய்யும் குறும்புகளையும்  தவறாமல் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். 

தந்தையை போல ரஜினியின் மகள்களுக்கும் ஆன்மீகத்தில் அதீத ஈடுபாடு என்றே சொல்லலாம்.  அந்த வகையில்  ரஜினியின் இளையமகள்  சௌந்தர்யா சமீபத்தில் மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீனத்தின் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகளை  நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். அவருக்கு மடத்தின் சார்பில் மரியாதை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

முன்னதாக 26ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த மாதம் உடல்நலக்குறைவால் முக்தி நிலையை அடைந்தார். இதன் காரணமாகச் சமீபத்தில் தருமபுரம் ஆதீனத்தின் 27-ஆவது குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் பொறுப்பேற்று  கொண்டது குறிப்பிடத்தக்கது.