×

தனது நிர்வாண புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நடிகை: காரணத்தை கேட்டால் மெர்சல் ஆயிடுவீங்க?

ஹாலிவுட் நடிகை பெல்லா தார்ன் தனது நிர்வாண புகைப்படங்களைத் தானே வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நியூயார்க்: ஹாலிவுட் நடிகை பெல்லா த்ரோன் தனது நிர்வாண புகைப்படங்களைத் தானே வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அமெரிக்கா நாட்டை சேர்ந்தவர் நடிகை பெல்லா த்ரோன்(21). இவர் ஹாலிவுட் படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துப் பிரபலமானவர். அவர் நடிப்பது மட்டுமின்றி அவ்வப்போது பாடல்களும் பாடுவார். இந்நிலையில் இவர் சமீபத்தில் தனது போனிலில் அவரின் நிர்வாண புகைப்படங்களை எடுத்துள்ளார். அதை இவருக்குப் பிடிக்காதவர்கள்
 

ஹாலிவுட் நடிகை பெல்லா தார்ன் தனது நிர்வாண புகைப்படங்களைத் தானே வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

நியூயார்க்: ஹாலிவுட் நடிகை பெல்லா த்ரோன் தனது நிர்வாண புகைப்படங்களைத் தானே வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

அமெரிக்கா நாட்டை சேர்ந்தவர் நடிகை பெல்லா த்ரோன்(21). இவர் ஹாலிவுட் படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துப் பிரபலமானவர். அவர் நடிப்பது மட்டுமின்றி அவ்வப்போது பாடல்களும் பாடுவார். 

இந்நிலையில் இவர் சமீபத்தில் தனது போனிலில் அவரின் நிர்வாண புகைப்படங்களை எடுத்துள்ளார். அதை இவருக்குப் பிடிக்காதவர்கள் யாரோ அவரின் செல்போனை ஹேக் செய்து புகைப்படங்களைத் திருடியுள்ளனர். பின்பு அந்த புகைப்படங்களை வைத்து மிரட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளானார் பெல்லா. இதனால் கோபமடைந்த பெல்லா, ‘நீ என்னடா என் நிர்வாண புகைப்படங்களை வைத்து மிரட்டுவது’ என்று அவரே அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ஹேக்கரை தகாத வார்த்தையால் திட்டி பதிவு வெளியிட்டுள்ளார். 

அதில், ‘ஹேக்கர்  என் போன் ஹேக் செய்துவிட்டுக் கடந்த 24 மணி நேரமாக என் நிர்வாண புகைப்படங்களை வைத்து மிரட்டினான். எனக்கு சிறப்பான ஒருவர் பார்க்க வேண்டும் விஷயத்தை யாரோ என்னிடம் இருந்து திருடி விட்டதாக உணர்கிறேன். அந்த ஹேக்கர் என்னுடைய புகைப்படங்கள் மட்டுமில்லாமல் மற்ற பிரபலங்களின் நிர்வாண புகைப்படங்களையும் எனக்கு அனுப்பி வைத்தான். 

இது இப்படியே விட்டால் சரியாகாது என்று தான், நானே என் புகைப்படங்களை வெளியிட்டேன். இனியும் அந்த நபர் என்னை மிரட்ட முடியாது. இனி நான் நிம்மதியாகத் தூங்குவேன். என் வாழ்க்கையை நீ கட்டுப்படுத்த முடியாது. அவன் என்னை எந்த புகைப்படங்களைக் காட்டி மிரட்டினானோ அந்த புகைப்படங்கள் இவை தான். கடந்த 24 மணிநேரமாக நான் அழுது கொண்டிருந்தேன். நான் எழுதிய புத்தகத்தைக் கொண்டாடாமல் அழுதேன். விரைவில் காவல்துறை உன் வீட்டிற்கு வரும்’  என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.