×

சௌந்தர்யா ரஜினிகாந்த் திருமணம்: நன்றி சொன்ன சூப்பர் ஸ்டார்; யாருக்கு தெரியுமா?

நடிகர் ரஜினிகாந்த் தனது மகளின் திருமணத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது மகளின் திருமணத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபரும் நடிகருமான விசாகனுக்கும் சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் நேற்று நடைபெற்றது. இந்த திருமணத்தில், மு.க.அழகிரி, நடிகர்கள் கமல் ஹாசன், பிரபு, விக்ரம் பிரபு, ராகவா
 

நடிகர் ரஜினிகாந்த்  தனது மகளின் திருமணத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை: நடிகர் ரஜினிகாந்த்  தனது மகளின் திருமணத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள்  சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபரும் நடிகருமான விசாகனுக்கும்  சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் நேற்று நடைபெற்றது.

இந்த திருமணத்தில், மு.க.அழகிரி, நடிகர்கள் கமல் ஹாசன், பிரபு, விக்ரம் பிரபு, ராகவா லாரன்ஸ், நக்கீரன் கோபால்  உள்ளிட்டவர்கள் திருமணத்துக்கு வருகை தந்தனர். முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் தங்கமணி, கடம்பூர் ராஜு உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்களும் திருமணத்துக்கு வருகை தந்தனர். திருமணத்தை அடுத்து நடைபெற்ற  வரவேற்பு நிகழ்ச்சியில் ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவர் முகேஷ் அம்பானி  மற்றும் அவரது மனைவி நீடா அம்பானி ஆகியோர் வருகை புரிந்தனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திருமணத்திற்கு வந்து மணமக்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக சௌந்தர்யா கடந்த 2010ம் ஆண்டு தொழிலதிபர் அஸ்வினை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  இதையடுத்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். அதன்பின் தன் மகனுடன் ரஜினிகாந்தின் போயஸ் தோட்ட இல்லத்தில் சௌந்தர்யா வாழ்ந்து வந்தார்.

இதையடுத்து தொழிலதிபர் வணங்காமுடியின் மகனும் நடிகருமான விசாகனுக்கு சௌந்தர்யாவை திருமணம் செய்ய முடிவு செய்தனர். விசாகனும் தினகரன் பத்திரிகையின் நிறுவனரான கே.பி.கே.குமரனின் மகள் கனிகாவை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.