×

சேரனை அசிங்கப்படுத்திய ரேஷ்மா – மதுமிதா : வெளுத்தும் வாங்கும் நடிகை கஸ்தூரி

ஒரு சாதனை இயக்குனர், சாரியெல்லாம் கேட்கிறார். டிவியில் பார்க்கும் நமக்கே சகிக்கவில்லை சென்னை: சேரனை அவமானப்படுத்திய மதுமிதா மற்றும் ரேஷ்மாவை நடிகை கஸ்தூரி திட்டி தீர்த்துள்ளார். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஒரு மாத காலத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்கில் நாட்டாமையாக வரும் சேரனின் பேச்சு கீரிப்பட்டி , பாம்புப்பட்டியில் எடுபடவில்லை. சேரன் நான் நாட்டாமை நான் சொல்வதைக் கேளுங்கள் என்று சொன்னாலும் கூட, அதை யாரும் காதில் போட்டுக்கொள்வதாகத் தெரியவில்லை.
 

ஒரு சாதனை இயக்குனர், சாரியெல்லாம் கேட்கிறார். டிவியில் பார்க்கும் நமக்கே சகிக்கவில்லை

சென்னை:  சேரனை அவமானப்படுத்திய மதுமிதா மற்றும் ரேஷ்மாவை நடிகை கஸ்தூரி திட்டி தீர்த்துள்ளார். 

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஒரு மாத காலத்தை எட்டியுள்ளது. இந்த வாரம்  லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்கில் நாட்டாமையாக வரும் சேரனின் பேச்சு  கீரிப்பட்டி , பாம்புப்பட்டியில் எடுபடவில்லை. சேரன் நான் நாட்டாமை நான் சொல்வதைக் கேளுங்கள் என்று சொன்னாலும் கூட, அதை யாரும் காதில் போட்டுக்கொள்வதாகத் தெரியவில்லை. இதனால் நேற்றைய போட்டியில் அப்செட்டாகவே இருந்தார் சேரன்.

குறிப்பாக ரேஷ்மாவிடம் நாட்டாமை தொனியில் எகிறிய சேரனை, கொஞ்சம் கூட முகதாட்சனை இல்லாமல் கால்மேல் கால் போட்டு  அமர்ந்து கொண்டு பொரிந்து தள்ளினார் ரேஷ்மா. ஒருகட்டத்தில் சேரன் இது எனக்கு கொடுத்த டாஸ்க் ரேஷ்மா நான் உன் பிறந்த நாள் அதுவுமா உங்களை காயப்படுத்தி இருந்தா மன்னிச்சிடுங்க என்று கூறி விட்டு சென்றார். 

 

இந்நிலையில் இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில், பிறந்தநாள் அன்று வயது கூடினால் போதுமா? வயதுக்கு ஏற்ற முதிர்ச்சியும் பண்பும் கூடவேண்டாமா ? டாஸ்கை விளையாட்டாக எடுத்துக்கொள்ளவும் தெரியவில்லை, வயதில் மூத்தவரிடம் மரியாதையாக பேசவும் முயலவில்லை… கால் மேல் கால் போட்டு பேசுபவர்கள் எல்லோரும் சிலுக்காகி விட முடியாது  birthday baby!’ என்று பதிவிட்டுள்ளார். 

 

மேலும் மற்றொரு பதிவில் மதுமிதா பற்றி குறிப்பிட்டுள்ள கஸ்தூரி, ஒரு சாதனை இயக்குனர், சாரியெல்லாம் கேட்கிறார். டிவியில் பார்க்கும் நமக்கே சகிக்கவில்லை.ஆனால் நேரில் இதை பார்த்துக்கொண்டு மற்றவர்கள் ஊமையாக இருக்கிறார்கள். சேரன்  சிறுமைப்படும் டாஸ்கை  கொடுத்து ரசித்த மதுமிதா தனக்கு வலித்தபோது சாமியாடியது total தக்காளி சட்னி !’ என்று விமர்சித்துள்ளார். 

 

கஸ்தூரியின் இந்த ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள நெட்டிசன்கள் சிலர், உண்மையை சொன்னதற்கே நன்றி.சேரன் சிறுமைப்படுவதும்,சாண்டியை படு கேவலமாகப் பேசியும் மதுவால் நேற்றைய எபிசோட் வெறுப்படிக்க செய்து விட்டார்கள்.சாண்டியின் பெருந்தன்மை அவரின் முதிர்ச்சி என்றும்  இன்னும் சிலர், சிறுமை அறிந்தேயல்லோ இந்த சிறு விளையாட்டில் சேர்ந்திருக்கிறார் இந்த சாதனை இயக்குனர். இதையும் ஒரு சாதனையாய் கொள்வோமே  என்று பதிவிட்டுள்ளனர்.