×

சூப்பர் ஸ்டாரின் மகள் சௌந்தர்யா மறுமணம்: எப்போது தெரியுமா?

நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யாவுக்கும், வணங்காமுடி விசாகனுக்கும் பிப்ரவரி 11ந்தேதி சென்னையில் திருமணம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யாவுக்கும், வணங்காமுடி விசாகனுக்கும் பிப்ரவரி 11ந்தேதி சென்னையில் திருமணம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தியின் இளையமகள் சவுந்தர்யாவுக்கும் சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் அஸ்வின் ராம்குமாருக்கும் கடந்த 2010ம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு வேத் என்ற ஆண் குழந்தை பிறந்த நிலையில், கருத்து வேறுபாடு
 

நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யாவுக்கும், வணங்காமுடி விசாகனுக்கும் பிப்ரவரி 11ந்தேதி சென்னையில் திருமணம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யாவுக்கும், வணங்காமுடி விசாகனுக்கும் பிப்ரவரி 11ந்தேதி சென்னையில் திருமணம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தியின் இளையமகள் சவுந்தர்யாவுக்கும் சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் அஸ்வின் ராம்குமாருக்கும் கடந்த 2010ம் ஆண்டு  காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு வேத் என்ற ஆண் குழந்தை பிறந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2016ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இந்நிலையில் சவுந்தர்யாவுக்கும், தொழில் அதிபர் மகனும் நடிகருமான விசாகனுக்கும் இடையே காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் வரும் பிப்ரவரி மாதம் 11ந்தேதி சென்னையில் திருமணம் நடைபெறவுள்ளது. எம்.ஆர்.சி நகரில் உள்ள பிரபல  நட்சத்திர விடுதியில் நடைபெறும் இந்த திருமணத்தில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சவுந்தர்யாவை திருமணம் செய்யும் விசாகன் என்பவர், ஏற்கனவே தினகரன் பத்திரிகையின் நிறுவனரான கே.பி.கே.குமரனின் மகள் கனிகாவை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.