சீதையாக நடித்த நயன்தாரா : பொது மேடையில் ஆபாசமாக விமர்சனம் செய்த நடிகர் ராதாரவி: அதிர்ச்சியில் ரசிகர்கள்!
நடிகர் ராதாரவி நடிகை நயன்தாரா குறித்து பொது மேடையில் ஆபாசமாகப் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: நடிகர் ராதாரவி நடிகை நயன்தாரா குறித்து பொது மேடையில் ஆபாசமாகப் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து தன்னுடைய தோற்ற பொலிவாலும், சீரிய நடிப்பு திறமையினாலும் வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளார்.
‘உன்னைப்போல் ஒருவன்’, ‘பில்லா 2’ படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கத்தில், நயன்தாரா கதாநாயகியாக நடித்த திரைப்படம் கொலையுதிர் காலம். இந்தப் படத்தில் நடிகை பூமிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை பூஜா என்டெர்டெயின்மென்டுடன் இணைந்து, எக்ஸெட்ரா என்டெர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.அப்போது நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ராதாரவி, ‘ நயன்தாரா ஒரு சிறந்த நடிகை. ஆனால் அவரை நடிகையர் திலகம், புரட்சி தலைவி என்று அழைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவரை பற்றி வராத செய்தியே இல்லை. ஆனாலும் அவர் சினிமாவில் இருக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் எல்லாவற்றையும் 4 நாளுக்கு தான் ஞாபகம் வைத்திருப்பார்கள். அப்புறம் மறந்துடுவாங்க’ என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘ நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார். அதே சமயம் சீதையாகவும் நடிக்கிறார். முன்பெல்லாம் புனிதமான கதராபாத்திரத்தில் நடிப்பதற்கு, கே.ஆர். விஜயா போன்ற நடிகைகளைத் தான் தேடுவார்கள். ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். பார்த்தவுடனே கும்பிடறவங்களும் நடிக்கிறார்கள், பார்த்த உடனே கூப்பிடுறவங்களும் நடிக்கிறார்கள்’ என்று ஆபாசமாகப் பேசினார்.
ராதாரவியின் இந்த சர்ச்சை பேச்சு அங்கிருந்தவர்களை முக சுழிக்க வைத்தது. இதனால் நிகழ்ச்சியில் சலசலப்பு ஏற்பட்டது. நயன்தாராவை குறித்து பேசிய ராதாரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாடகி சின்மயி கேட்டு கொண்டுள்ளார்.
மேலும் படிக்க: ரைசாவின் முத்த வீடியோ: வைரலாகும் ரசிகர்கள்!