சாதாரண பஸ் கண்டக்டர் நான்…. நமது அம்மா விமர்சனத்தை ஓடவிடும் சூப்பர் ஸ்டாரின் வைரல் வீடியோ!
எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி நீடிக்கும் அதிசயம் தொடரும் என்பதைத்தான் நாளையும் நடக்கப்போகிற அதிசயம்
நடிகர் ரஜினிகாந்த் கமல் ஹாசனின் உங்கள் நான் விழாவில் கலந்துகொண்டு பேசிய போது, எடப்பாடி அவர்கள் முதல்வராக ஆவார் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் அவர் ஆட்சியின் நான்கு ஐந்து மாதங்கள் கூட தாங்காது என்றார்கள் ஆனால் ஆட்சி தொடர்கிறது நேற்று அதிசயம் நடந்தது இன்றும் அதிசயம் நடக்கிறது நாளையும் அதிசயம் நடக்கும்’ என்று பேசினார். இது அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழ், ஆச்சரியம் பூச்சொரியும் எடப்பாடியாரும், சூசக ஆரூடம் சொன்ன சூப்பர் ஸ்டாரும் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பேருந்து நடத்துநராக வாழ்க்கையைத் தொடங்கிய ரஜினிகாந்த், கன்னித்தமிழ் பூமியின் சூப்பர் ஸ்டார் ஆவோம் என கனவில்கூட நினைத்திருக்க மாட்டார் என்றும் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி நீடிக்கும் அதிசயம் தொடரும் என்பதைத்தான் நாளையும் நடக்கப்போகிற அதிசயம் என ரஜினிகாந்த் சூசகமாக கூறியிருக்கிறார் என்றும் கூறியுள்ளது. மேலும் சினிமா வாய்ப்பு வரும் முன்பே முதல்வராக ஆசைப்படும் ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடி பழனிசாமி ஒரு ரியல் தலைவர். முதலமைச்சர் பதவி என்பது சினிமாவின் முதல் காட்சியில் ஆசைப்பட்டு மூன்றாவது காட்சியிலேயே கைக்கு எட்டி விடுகிற கற்பனை நாற்காலியல்ல என்றும் அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில், ‘2013-ம் ஆண்டு ரஜினிகாந்த் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், அதிசயங்களில் பலருக்கும் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதிசயம் நடக்கும். சாதாரண பஸ் கண்டக்டரான என்னை பல் உயர்ந்த மனிதர்கள் மத்தியில் நிறுத்தி இருப்பது அதிசயம் தான்’ என்று கூறியுள்ளார். இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது.