×

சர்ச்சையை கிளப்பும் போஸ்டர்?!.. விளக்கமளித்த தனுஷ் ரசிகர்மன்ற தலைவர்!..

கட்டவுட் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது, பட்டாசு கொளுத்துவது என தனுஷ் பட ரிலீஸ் நாளை திருவிழாக் கோலமாக்கி அழகு பார்த்தவர்கள். இந்நிலையில் தனுஷ் ரசிகர்கள் அடித்த போஸ்டர் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துள்ளுவதோ இளமை படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான தனுஷ், இந்த உயரத்தை அடைவார் என பலரும் நினைத்திருக்க மாட்டார்கள். ஆடுகளம் திரைப்படம் அவர் திரைப்பயணத்தை மொத்தமாக மாற்றியது, தேசிய விருது பெற்றார். பாலிவுட், ஹாலிவுட் என கால்பதித்து உலக அளவில் திரைத்துறை சார்ந்த
 

கட்டவுட் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது, பட்டாசு கொளுத்துவது என தனுஷ் பட ரிலீஸ் நாளை திருவிழாக் கோலமாக்கி அழகு பார்த்தவர்கள். இந்நிலையில் தனுஷ் ரசிகர்கள் அடித்த போஸ்டர் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துள்ளுவதோ இளமை படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான தனுஷ், இந்த உயரத்தை அடைவார் என பலரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

ஆடுகளம் திரைப்படம் அவர் திரைப்பயணத்தை மொத்தமாக மாற்றியது, தேசிய விருது பெற்றார். பாலிவுட், ஹாலிவுட் என கால்பதித்து உலக அளவில் திரைத்துறை சார்ந்த பலருக்கும் தெரிந்த முகமாக மாறிவிட்டார். என்னதான் தனுஷ் தன் நடிப்பின் மூலம் உயர்ந்தவர் என்றாலும், அவருக்கு பக்கபலமாய் செயல்பட்டது  அவரின் ரசிகர்கள்.

கட்டவுட் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது, பட்டாசு கொளுத்துவது என தனுஷ் பட ரிலீஸ் நாளை திருவிழாக் கோலமாக்கி அழகு பார்த்தவர்கள். இந்நிலையில் தனுஷ் ரசிகர்கள் அடித்த போஸ்டர் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷ் ரசிகர்மன்றத்தை சேர்ந்தவரை தனுஷின் உதவியாளர் ராஜா, ரசிகர்மன்ற தலைவர் சிவா ஆகியோர் நீக்கியதாக கூறப்படுகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து அவரது ரசிகர்கள் போஸ்டர் அடித்துள்ளனர்.

அதில் ராஜா, தனுஷ் ரசிகர்களை பார்த்து நாங்களா கட்டவுட், பேனர் வைக்க சொன்னதாகவும், தனுஷ் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவா

இதுதொடர்பாக தனுஷ் ரசிகர்மன்ற தலைவர் சிவாவுக்கு அழைத்து பேசினோம். அவர், ரசிகர் டிக்கெட்டை அதிக விலைக்கு விற்பது, ரசிகர்மன்ற விதிமுறையை மீறியது தொடர்பாக ஒருவர் மீது நடவடிக்கை எடுத்தோம். இந்த பிரச்னை நடந்து 8 மாதங்களுக்கு மேல் ஆகிறது, தனுஷ் மீது வெறுப்பில் உள்ள யாரோ அந்த நபரிடம் இவ்வாறு செய்ய சொல்லி இருக்கலாம். உண்மையான நிலவரம் என்ன என்பது, ரசிகர் மன்றத்தில் உள்ளவர்களுக்கு தெரியும் என கூறினார்.

இதையும் வாசிங்க: கஞ்சா வாங்க பணம் தராததால் தந்தையை அடித்துக் கொன்ற மகன்!..