×

சனம் ஷெட்டியை ஏமாற்றினாரா தர்ஷன்? தர்ஷன் தரப்பில் விளக்கம்!

தர்ஷனின் காதலியுமான சனம் ஷெட்டி சென்னை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் நேரடியாக புகார் அளித்தார். பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் தர்ஷன். இவர் மீது மாடல் அழகியும் தர்ஷனின் காதலியுமான சனம் ஷெட்டி சென்னை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் நேரடியாக புகார் அளித்தார். அதில் ‘எனக்கும் தர்ஷனுக்கும் கடந்த ஆண்டு மே மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. ஜூன் மாதம் இருவருக்கும் திருமணம் நடக்க இருந்தது. ஆனால் என்னை
 

 தர்ஷனின் காதலியுமான  சனம் ஷெட்டி சென்னை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் நேரடியாக புகார் அளித்தார்.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர்  தர்ஷன். இவர் மீது  மாடல் அழகியும்  தர்ஷனின் காதலியுமான  சனம் ஷெட்டி சென்னை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் நேரடியாக புகார் அளித்தார்.

 

அதில் ‘எனக்கும் தர்ஷனுக்கும்  கடந்த ஆண்டு  மே மாதம்  நிச்சயதார்த்தம் நடந்தது. ஜூன் மாதம் இருவருக்கும் திருமணம் நடக்க  இருந்தது. ஆனால்  என்னை சில நடிகர்களுடன் தொடர்புப்படுத்திப் பேசி தர்ஷன் திருமணத்தை நிறுத்தினார்.

 

என் வழியில் வராதே…இல்லையென்றால் என் ரசிகர்கள் உன்னை தவறாகச் சித்தரிப்பார்கள்  என்று மிரட்டினார். அவருக்காக நான் 15 லட்சம் வரை செலவு செய்தேன்.  நிச்சயதார்த்தம் முடிந்த பின்பு திருமணத்தை நிறுத்தியது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். 

இந்நிலையில் சனம் ஷெட்டி கொடுத்த புகாருக்கு தர்ஷன் பதில் என்ன என்று அவரின் டிவிட்டர் மற்றும் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் சென்று பார்க்கும் தர்ஷன் மற்றும் சனம்  ஷெட்டி ஆதரவாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். காரணம்  தர்ஷன் இதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

இருப்பினும் இதுகுறித்து பிரபல ஊடகத்திற்கு தர்ஷன்  மேனேஜர் அளித்துள்ள விளக்கத்தில், சனம் கூறும் எதுவும் உண்மை இல்லை என்று ஒன்றை வரியில் பேட்டியை  முடித்துள்ளார். இதுவொருபுறமிருக்க, தர்ஷனை இனி யாரும் கொண்டாட வேண்டாம் என்று சனம்  ஆதரவாளர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.