×

“சனம் மீது அதிக மரியாதை வைத்திருந்தேன்” காதல் முறிவு குறித்து தர்ஷன் உருக்கமான பதிவு!

கடந்த சில நாட்களாக மீடியாவில் பரவலாக பேசப்பட்டு வந்த இந்த விவகாரம் தற்போது நீதிமன்றம் வரை சென்றுள்ளது. பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் தர்ஷன். இவர் மீது மாடல் அழகியும் தர்ஷனின் காதலியுமான சனம் ஷெட்டி நிச்சயதார்த்தம் முடிந்த பின்பு திருமணத்தை நிறுத்தியது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் கொடுத்தார். மேலும் நான் இதுவரை தர்ஷனுக்காக 15 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளேன் என்றும் கூறினார் . இதற்கு
 

கடந்த சில நாட்களாக மீடியாவில் பரவலாக பேசப்பட்டு வந்த இந்த விவகாரம் தற்போது நீதிமன்றம் வரை சென்றுள்ளது. 

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர்  தர்ஷன். இவர் மீது  மாடல் அழகியும்  தர்ஷனின் காதலியுமான  சனம் ஷெட்டி  நிச்சயதார்த்தம் முடிந்த பின்பு திருமணத்தை நிறுத்தியது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் கொடுத்தார். மேலும் நான் இதுவரை தர்ஷனுக்காக 15 லட்சம் ரூபாய்  வரை செலவு செய்துள்ளேன்  என்றும்  கூறினார் .

 

 இதற்கு விளக்கமளித்த தர்ஷன், ‘சனம்  ஷெட்டி மாஜி காதலருடன் ஒரே அறையில் தங்கினார். என்னை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தியது அவர்தான். அதற்கான ஆதாரம் மற்றும் இன்னும் அவரைப்பற்றிய பல ஆதாரங்கள் என்னிடம் உள்ளது’  என்றார். கடந்த சில நாட்களாக மீடியாவில் பரவலாக பேசப்பட்டு வந்த இந்த விவகாரம் தற்போது நீதிமன்றம் வரை சென்றுள்ளது. 

 

இந்நிலையில் வழக்கு விசாரணை என பல சிக்கல்களுக்குப் பிறகு தர்ஷன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தலைகாட்டியுள்ளார். அதில், ‘பல காரணங்களால் உறவுகள் தோற்பதுண்டு. அந்த இருவரில் ஒருவருக்கு மகிழ்ச்சி இல்லையென்றாலும் அதில் நீடித்து இருப்பது சரி அல்ல. சுமூகமாக பிரிவது தான் நல்லது .அந்த நபர் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருந்தேன். ஆனால் நிலைமை மாறிவிட்டது. அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் என்னை அழிக்கவேண்டும் என்று நினைக்கிறார். என் மீது கூறிய எந்த புகாரும் உண்மையில்லை. என் கேரக்டரை மீடியாவும், என்னைப்பற்றி தெரியாதவர்களும் ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

இதனால்  நான் காயப்பட்டுவிட்டேன். அதனால் தான் சில நாட்கள்  சமூகவலைதளங்களில்  இருந்து தள்ளி இருந்தேன். வாழ்க்கையில் பின்னடைவுகள் ஏற்படத் தான் செய்யும். ஆனால் அதிலிருந்து நான் பாடம் கற்றுக் கொண்டுள்ளேன். இனி என் கெரியர் மற்றும் எதிர்காலம்தான் எனக்கு முக்கியம். எனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு நன்றிகள்’ என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். இதை கண்ட சிலர் தர்ஷனுக்கு ஆதரவாகவும், சிலரோ அவரை வசைபாடியும் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.