×

சண்டையை மறந்து மீண்டும் இணைந்த இசை ஜாம்பவான்கள்!

காப்புரிமை பிரச்சனையால் இளையராஜா – எஸ்.பி.பலசுப்பிரமணியம் இடையே இருந்த மோதலை மறந்து மீண்டும் இருவரும் இணைந்து இன்று புகைப்படம் எடுத்துள்ளனர். சென்னை: காப்புரிமை பிரச்சனையால் இளையராஜா – எஸ்.பி.பலசுப்பிரமணியம் இடையே இருந்த மோதலை மறந்து மீண்டும் இருவரும் இணைந்து இன்று புகைப்படம் எடுத்துள்ளனர். இசைஞானி இளையராஜா கச்சேரிகளில் அனுமதி இல்லாமல் தனது பாடல்களைப் பாடக் கூடாது என்று கூறி சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். அதுமட்டுமின்றி பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வெளிநாடுகளில் நடந்த கச்சேரிகளில் தனது இசையில் உருவான பாடல்களைப்
 

காப்புரிமை பிரச்சனையால் இளையராஜா – எஸ்.பி.பலசுப்பிரமணியம் இடையே இருந்த மோதலை  மறந்து மீண்டும் இருவரும்  இணைந்து இன்று புகைப்படம் எடுத்துள்ளனர். 

சென்னை: காப்புரிமை பிரச்சனையால் இளையராஜா – எஸ்.பி.பலசுப்பிரமணியம் இடையே இருந்த மோதலை  மறந்து மீண்டும் இருவரும்  இணைந்து இன்று புகைப்படம் எடுத்துள்ளனர். 

இசைஞானி இளையராஜா கச்சேரிகளில் அனுமதி இல்லாமல் தனது பாடல்களைப் பாடக் கூடாது என்று கூறி சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். அதுமட்டுமின்றி பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வெளிநாடுகளில் நடந்த கச்சேரிகளில் தனது இசையில் உருவான பாடல்களைப் பாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நோட்டீஸூம் அனுப்பினார். இதனால் சிறிது காலம் கச்சேரிகளில் இளையராஜாவின் பாடல்களை எஸ்பிபி பாடாமல் இருந்தார். 

பின்பு சில நாட்களில் நான் இளையராஜாவின் பாடலைப்  பாடுவேன் என்றும் என் மீது அவர் வழக்கு தொடர்ந்தால் அதை சட்டப்படி சந்திப்பேன்  என்று கூறியிருந்தார். இதனால் இருவருக்கும் இடையே சில மனக்கசப்பு நிலவி வந்தது. 

இது ஒரு பக்கம் இருக்க வருகின்ற ஜூன் 2ம் தேதி தமிழ்நாடு மியூசிக் யூனியன் நடத்தும் இளையராஜா இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் கே.ஜே. யேசுதாஸ் கலந்து கொள்ளவுள்ளனர். 

இதற்கான ஒத்திகை இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் தங்களது கருத்து வேறுபாடு அனைத்தையும் மறந்து எஸ்பிபியும் இளையராஜாவும் அந்த ஒத்திகையில் பங்குயேற்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.